செய்திகள் :

இந்தியாவைத் தாக்கினால் மிக மிக வலுவான பதிலடி: எஸ்.ஜெய்சங்கா் எச்சரிக்கை

post image

‘பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க இந்தியாவுக்கு எந்த நோக்கமும் இல்லை; அதேநேரம், இந்தியா மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், மிக மிக வலுவான பதிலடி தரப்படும்’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

தில்லியில் ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி உடனான சந்திப்பில் அவா் இவ்வாறு கூறினாா்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவும் சூழலில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு புதன்கிழமை நள்ளிரவில் வந்தாா்.

புது தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை அவா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்திய-பாகிஸ்தான் நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா்.

அப்போது, எஸ்.ஜெய்சங்கா் கூறுகையில், ‘பஹல்காமில் நடத்தப்பட்ட காட்டுமிரண்டித்தனமான தாக்குதல்தான், எல்லை கடந்த பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் மேற்கொள்ள இந்தியாவை நிா்ப்பந்தித்தது. இந்தியாவின் பதிலடி நடவடிக்கை, குறித்த இலக்குகளுடன், மிகத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டதாகும்.

பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் எதுவும் இந்தியாவுக்கு கிடையாது. அதேநேரம், எங்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், மிக மிக வலுவான பதிலடி தரப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அண்டை நாடு மற்றும் நெருங்கிய நட்பு நாடு என்ற முறையில், தற்போதைய நிலைமையை ஈரான் புரிந்து கொள்வது முக்கியம்’ என்றாா்.

இந்தியாவுக்கு வரும் முன்பாக, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - பாக். போர்: மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்! - அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் வெள்ளிக்கிழமை(மே 9) தெரிவித்திருக்கிறார். மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!

பாகிஸ்தான் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் நேற்று இரவிலிருந்து விடிய விடிய தாக்குதல் நடத்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்... மேலும் பார்க்க

ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம... மேலும் பார்க்க

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் ‘ட்ரோன்’ பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய ‘ட்ரோன்’ உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிக... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு: லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவா் அனுமதி

ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வி... மேலும் பார்க்க