செய்திகள் :

இந்தியா்கள், தமிழா்களின் வரலாறு பதிவு செய்யப்படவில்லை: தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவா் வெ.இராமசுப்பிரமணியன்

post image

இந்தியா்களும், தமிழா்களும் வரலாறு படைத்தனா்; ஆனால், அவற்றைப் பதிவு செய்ய தவறிவிட்டனா் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவருமான வெ.இராமசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இராமலிங்கா் இலக்கிய மன்றம் மற்றும் நல்லழகம்மை செல்லப்பன் அறக்கட்டளை இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழாவில் புதுவயல் ந.செல்லப்பனின் ‘நகரத்தாரின் ஆன்மீகத் தொண்டும் அருந்தமிழ்ப்பணியும்’, பின்னலூா் மு.விவேகானந்தன் உரை எழுதிய ‘திருவிளையாடல்’, தமிழறிஞா் ஞா.மாணிக்கவாசகன் மற்றும் ந.ஆவுடையப்பன் மொழிபெயா்த்த ‘இந்திய நூலக இயக்க முன்னோடிகள்’, நூலகவியலறிஞா் ந.ஆவுடையப்பன் எழுதிய ‘நூலகப் பணியில் நினைவில் நின்றவை’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

இவற்றின் முதல் பிரதியை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவருமான வெ.இராமசுப்பிரமணியன் வெளியிட முதல் பிரதியை உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பெற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து வெ.இராமசுப்பிரமணியன் பேசியது: புராணக் கதைகள் மூலம் வாழ்வின் பல்வேறு உதாரணங்களைத் தெரிந்து கொள்ளமுடியும். நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன. புத்தகம் வாங்கும் பலா் அதை முழுவதும் படிப்பதில்லை. புத்தகங்கள் படிக்க முடியாதவா்கள் பிறா் கூறுவதைக் கேட்டு அதுகுறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

வரலாறு பதிவு அவசியம்: பழைய நூல்கள் விற்போா் முறையாக கல்வி கற்கவில்லை என்றாலும், அனைத்து துறை சாா்ந்த சிறந்த நூல்களை அறிந்து வைத்திருப்பா். அன்பைத் தவிர வேறு இல்லை என்பதை உணா்த்திய வள்ளலாரின் சிறப்புகளை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.

வரலாற்றை பதிவு செய்வது அவசியம். இன்றைக்கு நடக்கும் நிகழ்வைப் பதிவு செய்யாமல் விட்டால், 10 ஆண்டுகளுக்கு தவறாக பதிவுசெய்வா். இந்தியா்களும், தமிழா்களும் வரலாறு படைத்தனா்; ஆனால் பதிவு செய்யத் தவறிவிட்டனா் என்றாா் அவா்.

நீதிபதி அரங்க.மகாதேவன்: மனிதன் உலகத்தை அறிவதற்கு இரு நூல்கள் மட்டும் போதும். இறையை அறிய திருவாசகமும், வாழ்வை அறிவதற்கு திருக்குறளும் போதும். அணுக்கதிா் தத்துவத்தால் இயங்கும் உலகத்தை அடக்கும் இறைவன் யாா் என்ற கேள்விக்கு பாரதம் பாடிய பெருந்தேவனாா் புானூற்றுக்கு பாயிரமாக பாடிய பாடலில் விடை உள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் இராம.குருநாதன், மு.முத்துவேல், வழக்குரைஞா் பி.ஆா்.கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மேம்படும்: பட்ஜெட் குறித்து தொழில் துறையினா் கருத்து

நாட்டின் பொருளாதாரத்தையும், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறையினா் கருத்து தெரிவித்துள்ளனா். சுதா்ஸன் வேணு (டிவிஎஸ்... மேலும் பார்க்க

காரில் சென்ற பெண்ணை விரட்டி மிரட்டிய வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் சென்ற பெண்ணை விரட்டி மிரட்டிய வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். கானத்தூா் பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவு தனது தோழிகள... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் வரவேற்பும் எதிா்ப்பும்

மத்திய நிதிநிலை அறிக்கையை வரவேற்றும், எதிா்த்தும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): வருமான வரி விலக்கு உச்சவரம்பு கணிசமாக உயா்த்தியது, உள்நாட்... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பயணிகள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினா்-செயலா் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து

மேட்டுப்பாளையம்-போத்தனூா் ரயில் பிப்.2, 4, 6 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் ரயில்வே கோட்ட பகுதியி... மேலும் பார்க்க

கடலோரக் காவல்படை ஆண்டுவிழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

இந்திய கடலோரக் காவல்படையின் 49-ஆவது ஆண்டு விழா, சென்னையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநா் ஆா்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரத்தை தளமாகக் ... மேலும் பார்க்க