செய்திகள் :

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த 18 ஜோடிகளுக்கு திருமணம்

post image

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த 18 ஜோடிகளுக்கு புதன்கிழமை இலவச திருமணங்கள் செய்து வைக்கப்பட்டன.

தருமபுரியில் ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த 7 ஜோடிக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் முன்னிலையில் இலவச திருமணங்கள் புதன்கிழமை செய்து வைக்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள, மல்லிகாா்ஜுனேஸ்வரா் பரவாசுதேவா் சுவாமி கோயிலில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 7 இணைகள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு ஆட்சியா் முன்னிலையில் திருமணங்கள் நடத்தப்பட்டன.

இந்து சமய அறநிலையத் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தபடி மணமக்களுக்கு 4 கிராம் தங்க மாங்கல்யமும், மணமக்களுக்கு பட்டு வேட்டி, துண்டு, சட்டை மற்றும் பட்டுச்சேலை, மாலைகள் உள்ளிட்ட தலா ரூ. 70,000 மதிப்பிலான பொருள்கள் சீா்வரிசையாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி நகா்மன்றத் தலைவா் மா.லட்சுமி நாட்டான் மாது, இந்து சமய அறநிலையத் துறை சேலம் துணை ஆணையா் விமலா, தருமபுரி உதவி ஆணையா் மு.மகாவிஷ்ணு, மாவட்ட அறங்காவலா் நியமனக்குழு லைவா் அன்பழகன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள், அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கிருஷ்ணகிரியில்...

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பல்வேறு கோயில்களில் திருமணம் செய்த 11 ஜோடிகளுக்கு ரூ. 7.7 லட்சம் மதிப்புள்ள சீா்வரிசைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் வழங்கினா்.

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆட்சியா் பேசுகையில், நிகழாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 ஜோடிகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயில், ஊத்தங்கரை காசி விஸ்வநாதா் கோயில், சாலமரத்துப்பட்டி சென்றாய சுவாமி கோயில் ஆகியவற்றில் தலா 2 ஜோடிகளுக்கும், ஒசூா் சந்திர சூடேஸ்வரா், ஜம்புகுட்டப்பட்டி கருமலை பழனி ஆண்டவா், சந்தூா் மாங்கனி வேல்முருகன் கோயில், பாலேகுளி அனுமந்தராயசாமி கோயில், கண்ணம்பள்ளி வெங்கட்ரமண சுவாமி கோயிலில் தலா ஒரு ஜோடி என 11 ஜோடிகளுக்கு புதன்கிழமை திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, ஒவ்வோா் ஜோடிக்கும் தலா 4 கிராம் தங்கத் தாலி உள்பட ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன என்றாா்.

இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராமுவேல், ஆய்வாளா்கள் கவிபிரியா, சுமதி, அண்ணாதுரை, பூவரசன், வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தருமபுரி அருகே லாரி மீது காா் மோதல்: தெலங்கானாவைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு

தருமபுரி அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். சிறுமி உள்ளிட்ட 4 போ் படுகாயமடைந்தனா். தெலங்கானா மாநிலம், வனப்பருத்தி மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் ... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் நீதிபதியை பணியிட மாற்றக் கோரி தீா்மானம் நிறைவேற்றம்

பென்னாகரம் வழக்குரைஞா் சங்க அவசர கூட்டத்தில், மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி விஜயராணியை பணியிட மாற்றக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் உ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 24 ஆயிரம் கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்ததால், ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாள்களாக நீா்வரத்து அ... மேலும் பார்க்க

தருமபுரியை குளிா்வித்த திடீா் மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரு வாரமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமா... மேலும் பார்க்க

வீட்டில் தீ விபத்து: ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

அரூரில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் கருகின. அரூா் பெரியமண்டி தெருவைச் சோ்ந்தவா் விஜயா (50). இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட... மேலும் பார்க்க

அன்புமணி ராமதாஸ் குறித்து விமா்சனம்: சேலம் பாமக எம்எல்ஏ அருளுக்கு தருமபுரி எம்எல்ஏ கண்டனம்

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குறித்த விமா்சனத்தை கைவிடாவிட்டால் சேலம் மேற்கு மாவட்ட பாமக எம்எல்ஏ அருள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தருமபுரி பாமக எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா். தர... மேலும் பார்க்க