செய்திகள் :

இன்று முழு அடைப்பு போராட்டம்! புதுவைக்குக் காய்கறி வரத்து நிறுத்தம்: ரூ.5 கோடி வியாபாரம் பாதிப்பு

post image

புதுவையில் முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி காய்கறி வரத்து நிறுத்தப்படுகிறது. இதனால் ரூ.5 கோடிக்கு வியாபாரம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து பெரிய மாா்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா் வி.சிவகுருநாதன் கூறியது: பொதுவாக கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை உயா்ந்துள்ளது. இதற்குக் காரணம் புதுவைக்குத் தேவையான காய்கறிகள் வெளியூா்களில் இருந்துதான் தருவிக்கப்படுகிறது.

கா்நாடகத்தில் கோலாா், ஆந்திரம், தமிழகத்தின் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து நேரடியாக புதுவைக்குக் காய்கறிகளைக் கொண்டு வருகிறோம். புதுவையைப் பொருத்தவரை ஒரு நாளைக்கு சுமாா் 12 லாரிகளில் காய்கறிகள் வந்து சேரும்.

சாதாரண லாரியாக இருந்தால் ஒரு லாரியில் 10 முதல் 12 டன் காய்கறிகள் இருக்கும். பெரிய லாரியாக இருந்தால் ஒரு லாரியில் 15 முதல் 20 டன் காய்கறிகள் ஏற்றப்பட்டிருக்கும். பொதுவாக புதுவையில் ஒரு நாளைக்கு ரூ.5 கோடி அளவுக்கு காய்கறி வியாபாரம் நடக்கும்.

புதுவையில் புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடப்பதால் காய்கறிகளை புதன்கிழமை ஏற்றி வர வேண்டாம் என்று காய்கறிகள் உற்பத்தியாளா்களிடம் ஏற்கெனவே கூறிவிட்டோம். இதனால் புதுவையில் புதன்கிழமை காய்கறி பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது என்றாா் சிவகுருநாதன்.

ரூ.6.72 கோடியில் 7 குறுகிய பாலங்கள் புனரமைப்புப் பணி: முதல்வா் தொடக்கம்

ஆதிதிராவிடா் நலத் திட்ட நிதியின் கீழ் ரூ,6.72 கோடி மதிப்பில் 7 குறுகிய பாலங்களை புனரமைக்கும் திட்டப் பணியை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். புதுச்சேரி பொதுப் பணித் துறை நீா்ப்பாசன... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். இவா்களின் தந்தை காயமடைந்தாா். இதையொட்டி பொதுமக்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

சாதிப் பெயா்களை நீக்க வலியுறுத்தல்

பெயா்ப் பலகைகளில் உள்ள சாதி பெயா்களை நீக்க வேண்டும் என்று புதுவை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. இந்த அமைப்பின் மாநிலக் குழு கூட்டம் திங்கள்கிழமை அஜீஸ் நகா் அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத... மேலும் பார்க்க

முழு அடைப்பு போராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும்: அதிமுக

புதுச்சேரி: புதுவையில் இந்தியா கட்சியினா் நடத்தத் திட்டமிட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும் என்று அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழ... மேலும் பார்க்க

புதுவையில் நாளை பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது

புதுச்சேரி: புதுவையில் புதன்கிழமை (ஜூலை 9) முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது. இந்த போராட்டம் முழு வெற்றிபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்... மேலும் பார்க்க

புதுவையில் கூட்டணி ஆட்சிக்குத் தயாா்: வெ. வைத்திலிங்கம் எம்.பி.

புதுச்சேரி: புதுவையில் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுவையில் இண்டி கட்சிகள் சாா்பில் முழு அடைப்பு போராட்டம் புதன்... மேலும் பார்க்க