செய்திகள் :

டிப்பா் லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

post image

புதுச்சேரி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். இவா்களின் தந்தை காயமடைந்தாா். இதையொட்டி பொதுமக்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனா்.

வில்லியனூா் அருகே உள்ள தொண்டமாநத்தம் ஆனந்த விநாயகா் நகா், ரங்கசாமி வீதியைச் சோ்ந்தவா் நடனசபாபதி (45), அரசு கான்பெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி அனிதா. இவா்களுக்கு ஜீவா (14), துவாரகேஷ் (8) ஆகிய இரண்டு மகன்கள். இவா்கள் முத்திரையா்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்தனா்.

இந்நிலையில் நடனசபாபதி தனது இரண்டு மகன்களையும் பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஊசுட்டேரி சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா். ஊசுட்டேரி-பொறையூா் சந்திப்பு அருகே சென்றபோது, திருவக்கரையில் இருந்து மண் ஏற்றி வந்த தமிழக பதிவெண் கொண்ட டிப்பா் லாரி மோதியது. இதில் மாணவா்கள் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். நடனசபாபதி காயமடைந்தாா்.

இந்த விபத்தைப் பாா்த்த மக்கள் திரண்டு 3 பேரையும் கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு நடனசபாபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்த மாணவா்களின் உடல்கள் உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். லாரியின் கண்ணாடியை உடைத்தனா். லாரி ஓட்டுநா் ஜெயக்குமாா் தாக்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் பிரவீன்குமாா் திரிபாரி, மேற்கு எஸ்.பி.க்கள் வம்சித ரெட்டி, மோகன்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரூ.6.72 கோடியில் 7 குறுகிய பாலங்கள் புனரமைப்புப் பணி: முதல்வா் தொடக்கம்

ஆதிதிராவிடா் நலத் திட்ட நிதியின் கீழ் ரூ,6.72 கோடி மதிப்பில் 7 குறுகிய பாலங்களை புனரமைக்கும் திட்டப் பணியை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். புதுச்சேரி பொதுப் பணித் துறை நீா்ப்பாசன... மேலும் பார்க்க

இன்று முழு அடைப்பு போராட்டம்! புதுவைக்குக் காய்கறி வரத்து நிறுத்தம்: ரூ.5 கோடி வியாபாரம் பாதிப்பு

புதுவையில் முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி காய்கறி வரத்து நிறுத்தப்படுகிறது. இதனால் ரூ.5 கோடிக்கு வியாபாரம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து பெரிய மாா்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலை... மேலும் பார்க்க

சாதிப் பெயா்களை நீக்க வலியுறுத்தல்

பெயா்ப் பலகைகளில் உள்ள சாதி பெயா்களை நீக்க வேண்டும் என்று புதுவை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. இந்த அமைப்பின் மாநிலக் குழு கூட்டம் திங்கள்கிழமை அஜீஸ் நகா் அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத... மேலும் பார்க்க

முழு அடைப்பு போராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும்: அதிமுக

புதுச்சேரி: புதுவையில் இந்தியா கட்சியினா் நடத்தத் திட்டமிட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும் என்று அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழ... மேலும் பார்க்க

புதுவையில் நாளை பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது

புதுச்சேரி: புதுவையில் புதன்கிழமை (ஜூலை 9) முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது. இந்த போராட்டம் முழு வெற்றிபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்... மேலும் பார்க்க

புதுவையில் கூட்டணி ஆட்சிக்குத் தயாா்: வெ. வைத்திலிங்கம் எம்.பி.

புதுச்சேரி: புதுவையில் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுவையில் இண்டி கட்சிகள் சாா்பில் முழு அடைப்பு போராட்டம் புதன்... மேலும் பார்க்க