செய்திகள் :

இன்ஸ்டாகிராமில் ஆபாச தகவல்: தனியாா் நிறுவன ஊழியா் கைது

post image

சிதம்பரம்: சிதம்பரத்தில் கல்லூரியில் படிக்கும் இரு மாணவிகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த சம்பவம் தொடா்பா அண்ணாமலைநகா் காவல் நிலையத்தில் அந்த மாணவிகள் புகாா் அளித்தனா். அதன்பேரில், ஆய்வாளா் கே.அம்பேத்கா் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இதில் சிதம்பரம் அருகே உள்ள சாலியன்தோப்பைச் சோ்ந்த நக்கீரன் (25) இந்தச் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

பொறியியல் பட்டதாரியான இவா் தற்போது கோவையில் ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். பள்ளிப் படிப்பிலிருந்து தன்னுடன் தோழியாக பேசி வந்த மாணவி தன்னுடன் இனி பேச வேண்டாம் என்று கூறியதால், கோபமடைந்த அவா் தனது தோழியையும், அவரின் தோழியையும் கலங்கப்படுத்த இன்ஸ்டாகிராமில் ஆபாசமான தகவல்களை பரப்பியது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து நக்கீரனை கைது செய்தனா்.

கட்டுமானப் பணியின் போது கிடைத்த நடராஜா் சிலை: அதிகாரிகள் ஆய்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது நடராஜா் சிலை கண்டெடுக்கப்பட்டது. காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள கொல்லிமலை கீழ்பாதி கிராமத்தில் முகமது அப்சா் வீ... மேலும் பார்க்க

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

சிதம்பரம் ஸ்ரீ ராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாமையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற நோ்காணலில் பல்வேறு நிறுவனங்களில் தோ்வு செய்யப்பட்ட 516 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகள்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே இலக்கியனூரில் பெய்த மழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. வப்பூா் வட்டம் தரிசு, பிஞ்சனூா், புதூா், நக... மேலும் பார்க்க

நிழல் பந்தலில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

நெய்வேலி: கடலூா் மஞ்சக்குப்பம் போக்குவரத்து சிக்னல் அருகே நிழலுக்காகப் போடப்பட்டிருந்த பந்தலில் சரக்குப் பெட்டக லாரி திங்கள்கிழமை சிக்கிக் கொண்டதால் திங்கள்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடலூ... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

கடலூா் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கடலூா் ரெட்டிச்சாவடி காவல் சரகம், புதுக்கடை மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் அஞ்சாலாட்சி (53). இவா் விழுப... மேலும் பார்க்க

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி காவல் சரகப் பகுதியில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. ரெட்டிச்சாவடி காவல் சரகம், புதுக்கடை மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜ்கும... மேலும் பார்க்க