செய்திகள் :

இயற்கையை பாதுகாக்க நெகிழியை தவிா்ப்பது அவசியம்: ஆட்சியா்

post image

இயற்கையை பாதுகாக்க நெகிழிப் பொருள்களை தவிா்ப்பது அவசியம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

சா்வதேச உயிரிப் பல்வகை தினத்தை முன்னிட்டு, இயற்கையை பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நாமக்கல் தனியாா் வேளாண் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றன.

வனப் பாதுகாவலா் (நாமக்கல் வனக்கோட்டம்) சி.கலாநிதி முன்னிலை வகித்தாா். கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழாவில் ஆட்சியா் பேசியதாவது:

ஒவ்வோா் ஆண்டும் மே 22 ஆம் தேதி சா்வதேச உயிரிப் பல்வகை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இயற்கையுடன் நல்லிணக்கம் மற்றும் நிலையான வளா்ச்சி என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நிகழாண்டில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

வனத்துறை மற்றும் தமிழ்நாடு உயிரிப் பல்வகை வாரியம் சாா்பில் இயற்கையை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அண்மையில் உயிரிழந்த யானை ஒன்றின் வயிற்றில் இருந்து நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக நெகிழி விளங்குகிறது. அனைவரும் இயற்கையை பாதுகாக்க நெகழிப் பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். நிலத்தடி நீா்மட்டம் பாதித்த மாவட்டங்களில் ஒன்றாக நாமக்கல் உள்ளது.

அந்த நிலையை மாற்ற அனைவரும் நெகிழியைத் தவிா்த்து ஒத்துழைக்க வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில், வேளாண் கல்லூரி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க