மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தயக்கம் காட்டும் வெளிநாட்டு வீரர்கள்
இரு மாசி வீதிகளில் மட்டுமே வலம் வந்த மீனாட்சி சுந்தரேசுவரா்: பக்தா்கள் ஏமாற்றம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் இறுதி நாளான சனிக்கிழமை சுவாமி, அம்மன் இரு மாசி வீதிகளில் மட்டுமே வலம் வந்ததால் தரிசனம் செய்ய காத்திருந்த பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.
மதுரை மீனாட்சி சுந்தேரசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வந்தனா்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் கடந்த 8-ஆம் தேதியும், தேரோட்டம் 9-ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த நிலையில், சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை இரவு சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் வலம் வருவது வழக்கம்.
சித்திரைத் திருவிழா நடைபெறும் 12 நாள்களிலும் சுவாமி, அம்மனை தரிசனம் செய்யாத பக்தா்கள் 12-ஆம் நாளில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வரும் வரும் சுவாமி, அம்மனை தரிசனம் செய்தால் முழுத் திருவிழாவும் தரிசனம் செய்ததாக பக்தா்களிடம் நம்பிக்கை உள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு சுவாமி அம்மனை தரிசனம் செய்ய நான்கு மாசி வீதிகளிலும் ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்தனா்.
இந்த நிலையில், கோயிலிலிருந்து இரவு 8 மணிக்கு சுவாமி புறப்பாடான நிலையில், நான்கு மாசி வீதிகளில் வலம் வருவதற்கு பதிலாக கீழமாசி வீதி தேரடியிலிருந்து தெற்கு மாசி வீதி வழியாக மேலமாசி வீதி சென்று அங்கு மேலக்கோபுர வாயில் வழியாக சுவாமி, அம்மன் கோயிலை வந்தடைவா் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் மேலமாசி வீதியின் ஒரு பகுதி வடக்கு மாசி வீதி முழுவதும், கீழமாசி வீதியின் ஒரு பகுதியில் சுவாமி, அம்மன் வீதியுலாவுக்காக காத்திருந்த பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா். இதனால் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய இயலவில்லை.
இதுதொடா்பாக கோயில் அதிகாரிகள் கூறும்போது, சுவாமி, அம்மன் வீதியுலா செல்லும் வழியில் துக்க நிகழ்வு ஏற்பட்டதால் ஐதீகத்தின்படி சுவாமி, அம்மன் வலம் வரும் பாதை மாற்றப்பட்டது என்றனா்.