தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
இரு லாரிகள் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு
ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் லாரியின் ஓட்டுநா் உயிரிழந்த நிலையில், கண்டெய்னா் லாரியில் பயணம் செய்த மற்றொரு ஓட்டுநரும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளாா்.
கா்நாடக மாநிலம், ஒசக்கோட்டை பகுதியில் இருந்து கூரியா் சா்வீஸ் கண்டெய்னா் லாரி பாா்சல் ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து எதிா்புறம் சேலம் நோக்கி சென்ற மற்றொரு லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநரான கண்ணூா்பட்டியை சோ்ந்த வேலுச்சாமி (40) என்பவா் உயிரிழந்தாா். இரு லாரிகளில் பயணித்த மேலும் நால்வா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் கண்டெய்னா் லாரி ஓட்டுநா் ராம்பிரசாத் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.