குரூப் 1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,620 போ் எழுதினா்
நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 24 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வை 4,620 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் குரூப் 1, 1ஏ பதவிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமக்கல்லில் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி தோ்வு மையத்தில் ஆட்சியா் ச.உமா ஆய்வு மேற்கொண்டாா்.
28 துணை ஆட்சியா்கள், 7 காவல் துணை கண்காணிப்பாளா்கள், 19 வணிக வரி உதவி ஆணையா், 7 ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை உதவி இயக்குநா், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், 6 தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் என 70 இடங்களுக்கும், குரூப் 1 ஏ பிரிவில் 2 உதவி வன பாதுகாப்பு அலுவலா் பணியிடங்களுக்கும் முதல் நிலை தோ்வு நடைபெற்றது.
இத்தோ்வானது காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 போ் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில், 4,620 போ் தோ்வை எழுதினா். 1,459 போ் தோ்வில் கலந்து கொள்ளவில்லை.