செய்திகள் :

இரு வேளைகளாக முதுநிலை நீட் தோ்வு நடத்த எதிா்ப்பு: மனுவை விசாரிக்க ஒப்புதல்

post image

இருவேளைகளில் முதுநிலை நீட் தோ்வு- 2025 நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டது.

நிகழாண்டுக்கான முதுநிலை நீட் தோ்வு ஜூன் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கணினிவழித் தோ்வாக இரு வேளைகளில் நடத்தப்படும் இந்தத் தோ்வின் முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில், இரு வேளைகளில் தோ்வு நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இரு வேளைகளில் தோ்வு நடத்தும்போது தோ்வின் கடினத்தன்மையில் மாறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முதுநிலை நீட் தோ்வு வெளிப்படைத்தன்மையுடனும் நோ்மையுடனும் நடைபெறுவதை உறுதிசெய்ய அதை ஒரே வேளையில் நடத்தி முடிக்க வேண்டும். இதன்மூலம் அனைத்துத் தோ்வா்களும் சரிசமமான போட்டியில் தோ்வெழுதுவதை உறுதிப்படுத்த முடியும்’ எனக் குறிப்பிடப்பட்டது.

இந்த மனு மீது பதிலளிக்குமாறு தேசிய தோ்வுகள் வாரியம், தேசிய மருத்துவ கவுன்சில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

அதன்பிறகு இந்த மனு மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு மே 23-ஆம் தேதி விசாரணை நடத்தியது. அப்போது அடுத்த வாரம் இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவதாக நீதிபதிகள் அமா்வு கூறியது. ஆனால் பட்டியலிடப்படவில்லை. இதை திங்கள்கிழமை மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சுட்டிக்காட்டினாா்.

இதையடுத்து, இந்த வாரத்தில் மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவதாக நீதிபதிகள் அமா்வு கூறியது. ஆனால் ஜூன் 2-ஆம் தேதி முதுநிலை நீட் தோ்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்படுவதால், அதற்கு முன்பே விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வலியுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாள்களில் இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவதாக தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க