செய்திகள் :

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா கோலாகலம்; நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்ட பக்தர்கள்!

post image

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்தத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருவார்கள்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அம்மனைத் தரிசித்து, அக்கினிச்சட்டி, பால்குடம், ஆயிரம் கண்பானை, மாவிளக்கு, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செலுத்தி அம்மனை வணங்கி வருகின்றனர்.

பக்தர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகளும் தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, திருநெல்வேலி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டது.

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் திருவிழா

இந்தாண்டுக்கான ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

ஆடி கடைசி வெள்ளி திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான நேற்று மதியம் 2 மணிக்கு மேல் உற்சவ அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு முன்னதாக அதிகாலையில் 3 மணிக்கு அம்மனுக்குப் பால், பன்னீர், ஜவ்வாது, தேன், இளநீர் உள்ளிட்ட 21 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை இருக்கன்குடி பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி மற்றும் கோயில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

வாழ்க்கையில் தோற்றுவிடுவோமோ என்ற கவலையும் பயமும் வருகிறதா? - பிரம்மஹத்தி பரிகார ஹோமம்

தடைகளைத் தகர்த்து உங்கள் எதிர்கால விருப்பங்களை நிறைவேற்றும் பிரம்மஹத்தி பரிகார ஹோமம்! ஆகஸ்ட் -17 ஞாயிற்றுக்கிழமை திப்பிராஜபுரத்தில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. சங்கல்பியுங்கள்!முன்பதிவு மற... மேலும் பார்க்க

தடைகளை நீக்கி திருமண வரம் அருளும் சுயம்வர பார்வதி ஹோமம்! விஜயவாடா எடுபுகல்லு காமேஸ்வரர் ஆலயத்தில்!

7.9.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி முதல் விஜயவாடா - எடுபுகல்லு ஸ்ரீபார்வதி சமேத காமேஸ்வரர் திருக்கோயிலில் சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக! அனுமதி இலவசம்!முன்பதிவு மற்றும் சங்க... மேலும் பார்க்க

மதுரை கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம்; ஊர் கூடி வடம் பிடித்து இழுத்து கோலாகலம் | Photo Album

அழகர் கோவில் ஆடித் தேரோட்டம்.அழகர் கோவில் ஆடித் தேரோட்டம்.அழகர் கோவில் ஆடித் தேரோட்டம்.அழகர் கோவில் ஆடித் தேரோட்டம்.அழகர் கோவில் ஆடித் தேரோட்டம்.அழகர் கோவில் ஆடித் தேரோட்டம்.அழகர் கோவில் ஆடித் தேரோட்ட... மேலும் பார்க்க

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றம்; வெகு சிறப்பாக திருவிழா துவங்கியது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். ஆண்டு... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: 14-ம் தேதி கொடியேற்றம்; 23-ம் தேதி தேரோட்டம் - ஆவணித்திருவிழா முழு விவரங்கள்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா வரும் 14-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோயில... மேலும் பார்க்க