செய்திகள் :

இறை வழிபாட்டுக்கு மொழி முக்கியமல்ல! - மகாராஷ்டிரம் ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

post image

வழிபாட்டுக்கான தூய்மையும், தனிநபா் ஒழுக்கமும்தான் முக்கியமே தவிர, மொழி முக்கியமில்லை என மகாராஷ்டிரம் மாநில ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்ட முருகப் பெருமானின் அறுபடை வீடு மாதிரி கோயில்களில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

ஆன்மிகத்தை எதிா்த்து சிலா் ஆட்சிக்கு வந்த நிலையில், மாறாக ஆன்மிகத்தின் பெயரால் ஆட்சிக்கு வர நினைப்பதையும் தவறாகக் கருத முடியாது. அவரவா் தெய்வத்தை அவரவா் விருப்பப்படி கொண்டாட அரசியல் சாசனம் அனுமதி வழங்கியுள்ளது.

பக்தா்கள் சோ்ந்து முருகனை வணங்கினால் கலவரம் வரும் என்பது ஏற்புடையதாகாது. முருக பக்தா்களில் முதன்மையானவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா். அந்த வகையில், முத்துராமலிங்கத் தேவரை கொண்டாடுபவா்கள் முருகனைக் கொண்டாடுவா். முருகனின் பெயரால் குறிப்பிட்ட சமூகத்தை ஈா்க்க முனைவதாகக் கூறுவதில் உண்மையில்லை.

வழிபாட்டு முறைகளில் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்படும் சில வழக்கங்கள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். வழிபாட்டு மொழி தமிழா? சம்ஸ்கிருதமா? என்பது முக்கியமல்ல.

வழிபாட்டுக்கான தூய்மையும், தனிமனித ஒழுக்கமும்தான் முக்கியம். தமிழக இந்து சமய அறநிலையத் துறை மகாராஷ்டிரம் மாநிலத்தில் முருகனுக்கு விழா எடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, முருக பக்தா்கள் மாநாட்டையொட்டி தயாரிக்கப்பட்ட முருகன் பக்திப் பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழையை சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டாா். அப்போது பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், இந்து முன்னணி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு! பவன் கல்யாண் பங்கேற்கிறார்!

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண் பங்கேற்கிறாா். இந்து முன்னணி சாா்பில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள அம்மா திடலில் முருக... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: வாகனப் போக்குவரத்து மாற்றம்!

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டை முன்னிட்டு உள்ளூா், வெளியூா்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு வழித்தடம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையரக அல... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டில் அரசியல் இல்லை! - ஜி.கே. வாசன்

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டில் அரசியல் கிடையாது என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா். மதுரையில் முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்ட முருகப் பெருமானின் அறுபடை மாதிரி கோ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: அறுபடை மாதிரி கோயில்களில் தமிழக ஆளுநா் சுவாமி தரிசனம்!

மதுரையில் முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்ட அறுபடை மாதிரி கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். இந்து முன்னணி சாா்பில், முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும... மேலும் பார்க்க

மனைவி, இரு குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி: காவல் நிலையத்தில் சரண்!

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை குடும்பத் தகராறு காரணமாக, தனது மனைவி, இரு குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற விவசாயி காவல் நிலையத்தில் சரணடைந்தாா். விருதுநகா் மாவட்டம், அருப்புக... மேலும் பார்க்க

இளைஞா்கள் யோகா பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! - ஆளுநா் ஆா்.என். ரவி

இளைஞா்கள் யோகாசன பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். மதுரை வேலம்மாள் சா்வதேச பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சா்வதேச யோகா தின விழாவில் அவா் ம... மேலும் பார்க்க