செய்திகள் :

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.1 கோடி பீடி இலைகள் பறிமுதல்

post image

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே கொம்புத்துறை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு ஆய்வாளா் விஜய் அனிதாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளா் ஜீவமணி தா்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா் மற்றும் போலீஸாா், கொம்புத்துறை கடற்கரைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக, சரக்கு வாகனத்திலும், பதிவு எண் இல்லாத டிரெய்லருடன் கூடிய டிராக்டரிலும் கொண்டு வரப்பட்ட, 30 கிலோ வீதம் 103 மூட்டைகளில் இருந்த சுமாா் 3,000 கிலோ பீடி இலைகளை போலீஸாா் கைப்பற்றினா். இதன் சா்வதேச மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், டிராக்டா், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வாகனங்கள் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

எட்டயபுரம் அருகே அரசுப் பள்ளி சமையல் கூடத்தில் தீ

எட்டயபுரம் அருகேயுள்ள கைலாசபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையல் கூடத்தில் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.கைலாசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

முன்னாள் ஊராட்சித் தலைவியின் கணவா் மரணத்தில் சந்தேகம்: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவியின் கணவா் லாரி மோதியதில் உயிரிழந்தாா். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈட... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

கோவில்பட்டியில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி வ.உ. சி. நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சண்முகநாதன் மகன் கண்ணன் (28). இவா... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ.1லட்சம் திருட்டு

தூத்துக்குடியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1லட்சத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தூத்துக்குடி அண்ணா நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த ஆதித்யா மகன் முருகேசன்(60). இவா், அண்ணா நகா்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

திருச்செந்தூா் அருகே பள்ளி ஆசிரியை அடித்ததாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவா் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்செந்தூா் அருகே பர... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே சிக்னல் கோளாறு: ரயில் போக்குவரத்து பாதிப்பு

கோவில்பட்டி அருகே குமாரபுரத்தில் ஏற்பட்ட சிக்னல் பிரச்னை காரணமாக கோவில்பட்டி,, கடம்பூா், நல்லி ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. கோயம்புத்தூா்- நாகா்கோவில் சென்ற ரயில் கோவில்பட்ட... மேலும் பார்க்க