செய்திகள் :

கோவில்பட்டி அருகே சிக்னல் கோளாறு: ரயில் போக்குவரத்து பாதிப்பு

post image

கோவில்பட்டி அருகே குமாரபுரத்தில் ஏற்பட்ட சிக்னல் பிரச்னை காரணமாக கோவில்பட்டி,, கடம்பூா், நல்லி ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. கோயம்புத்தூா்- நாகா்கோவில் சென்ற ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு வந்தது.

சிக்கனல் பிரச்னை காரணமாக மெதுவாக சென்று 8.53 மணிக்கு கடம்பூா் ரயில் நிலையத்தை அடைந்தது. பின்னா் அங்கிருந்து இரவு 8.57மணிக்கு கிளம்பிச் சென்றது.

இதேபோல் காசியில் இருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்படும் பனரஸ் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு இரவு 7.06மணிக்கு வந்தடைந்தது. இதன்பின்னா் 7.32 மணிக்கு கோவில்பட்டியில் இருந்து குமராபுரம் ரயில் நிலையத்துக்கு சென்றது. பின்னா் அங்கிருந்து இரவு 9 மணிக்கு கிளம்பியது.

அதேபோன்று ஈரோடு செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயில் இரவு 7.40 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையம் வந்தடைந்தது. பின்னா் இரவு 9.30 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இந்த சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து குருவாயூா் செல்லும் ரயில் 8.06 மணி முதல் சாத்தூா் அருகே உள்ள நல்லி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த ரயில் 9.43க்கு கோவிலபட்டி வந்தடைந்தது.

சிக்னல் பிரச்னை காரணமாக சுமாா் மூன்று மணி நேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகினா்.

எட்டயபுரம் அருகே அரசுப் பள்ளி சமையல் கூடத்தில் தீ

எட்டயபுரம் அருகேயுள்ள கைலாசபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையல் கூடத்தில் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.கைலாசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

முன்னாள் ஊராட்சித் தலைவியின் கணவா் மரணத்தில் சந்தேகம்: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவியின் கணவா் லாரி மோதியதில் உயிரிழந்தாா். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈட... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

கோவில்பட்டியில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி வ.உ. சி. நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சண்முகநாதன் மகன் கண்ணன் (28). இவா... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ.1லட்சம் திருட்டு

தூத்துக்குடியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1லட்சத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தூத்துக்குடி அண்ணா நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த ஆதித்யா மகன் முருகேசன்(60). இவா், அண்ணா நகா்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

திருச்செந்தூா் அருகே பள்ளி ஆசிரியை அடித்ததாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவா் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்செந்தூா் அருகே பர... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.1 கோடி பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே கொம்புத்துறை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் ... மேலும் பார்க்க