மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ.1லட்சம் திருட்டு
தூத்துக்குடியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1லட்சத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி அண்ணா நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த ஆதித்யா மகன் முருகேசன்(60). இவா், அண்ணா நகா் 7ஆவது தெருவில் பலசரக்கு கடை நடத்தி வருகிறாா்.
திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்ற இவா், செவ்வாய்க்கிழமை காலையில் திறக்க வந்தபோது, ஷட்டரில் பூட்டுகள் சேதப்படுத்தப்பட்டிருந்ததாம்.
இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது, ரூ.1லட்சம் திருடு போயிருந்தது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.