அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
கோவில்பட்டியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
கோவில்பட்டியில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி வ.உ. சி. நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சண்முகநாதன் மகன் கண்ணன் (28). இவா் காதலித்த பெண்ணை, பெற்றோா் சம்மதத்துடன் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பின்பு கண்ணன் வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் தம்பதி இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் கண்ணன் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].