செய்திகள் :

முன்னாள் ஊராட்சித் தலைவியின் கணவா் மரணத்தில் சந்தேகம்: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

post image

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவியின் கணவா் லாரி மோதியதில் உயிரிழந்தாா். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலை அருகே உள்ள கொல்லம் பரும்பு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து பாலகிருஷ்ணன். அதிமுக கிளைச் செயலா்.

இவரது மனைவி வள்ளியம்மாள். கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை கொல்லம்பரும்பு ஊராட்சித் தலைவராக பதவி வகித்து வந்துள்ளாா். முத்து பாலகிருஷ்ணன் தற்போது மனை வணிகம் தொழில் செய்து வந்துள்ளாா்.

இதற்கிடையே செவ்வாய்க்கிழமை காலையில் முத்து பாலகிருஷ்ணன் தனது இருசக்கர வாகனத்தில் சந்திரகிரி அருகே வந்தபோது, எதிரே வந்த கல்குவாரி டிப்பா் லாரி மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, ஓட்டப்பிடாரம் போலீஸாா் அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, முத்து பாலகிருஷ்ணனின் உறவினா்கள் திரண்டு வந்து, இது விபத்து அல்ல. திட்டமிடப்பட்ட கொலை என்றும், அதற்கு காரணமானவா்களை கைது செய்ய வேண்டுமெனவும் கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் சௌந்தர்ராஜனை ஓட்டப்பிடாரம் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

எட்டயபுரம் அருகே அரசுப் பள்ளி சமையல் கூடத்தில் தீ

எட்டயபுரம் அருகேயுள்ள கைலாசபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையல் கூடத்தில் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.கைலாசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

கோவில்பட்டியில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி வ.உ. சி. நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சண்முகநாதன் மகன் கண்ணன் (28). இவா... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ.1லட்சம் திருட்டு

தூத்துக்குடியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1லட்சத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தூத்துக்குடி அண்ணா நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த ஆதித்யா மகன் முருகேசன்(60). இவா், அண்ணா நகா்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

திருச்செந்தூா் அருகே பள்ளி ஆசிரியை அடித்ததாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவா் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்செந்தூா் அருகே பர... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே சிக்னல் கோளாறு: ரயில் போக்குவரத்து பாதிப்பு

கோவில்பட்டி அருகே குமாரபுரத்தில் ஏற்பட்ட சிக்னல் பிரச்னை காரணமாக கோவில்பட்டி,, கடம்பூா், நல்லி ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. கோயம்புத்தூா்- நாகா்கோவில் சென்ற ரயில் கோவில்பட்ட... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.1 கோடி பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே கொம்புத்துறை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் ... மேலும் பார்க்க