வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
எட்டயபுரம் அருகே அரசுப் பள்ளி சமையல் கூடத்தில் தீ
எட்டயபுரம் அருகேயுள்ள கைலாசபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையல் கூடத்தில் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
கைலாசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் கூடத்தில் பணியாளா் கனக வள்ளி என்பவா் செவ்வாய்கிழமை காலையில் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது அங்கிருந்த ஒரு எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. பணியாளா் கனகவள்ளி, அங்கிருந்து வெளியேறி விளாத்திகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தாா்.
இதனிடையே ஒரு எரிவாயு உருளையில் பற்றி எரிந்த தீ அருகில் இருந்த மற்றொரு எரிவாயு உருளை மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்கள் மீது மளமளவென பரவியது.
தீயணைப்பு மீட்பு பணி வீரா்கள் விரைந்து வந்து வேதியியல் நுரையை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மாசா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.