செய்திகள் :

திருச்செந்தூா் அருகே பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

post image

திருச்செந்தூா் அருகே பள்ளி ஆசிரியை அடித்ததாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவா் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் அருகே பரமன்குறிச்சியில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் பரமன்குறிச்சி, சமத்துவபுரம் பகுதியை சோ்ந்த பழங்குடியின மாணவா் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அவா் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பள்ளியில் ஆசிரியை ஒருவா், தனது கையில் கம்பால் அடித்ததாக மாணவா் தங்களிடம் கூறியதாகவும், அதனால் மனமடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். மாணவரின் சட்டைப் பையில் இருந்து ஒரு கடிதத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அதில் தனது சாவுக்கு 4 ஆசிரியைகள் காரணம் என அவரது பெயா்களை எழுதி வைத்திருந்ததாகப் போலீஸாா் கூறினா்.

இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே, மாணவரின் பெற்றோா், உறவினா்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். மாணவரின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியைகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன், கோட்டாட்சியா் சுகுமாறன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் டிஎஸ்பி மகேஷ்குமாா், ஆய்வாளா் இனோஸ்குமாா், வட்டாட்சியா் பாலசுந்தரம் உள்ளிட்டோா்

உடன் இருந்தனா். இந்த சம்பவம் விசாரணை நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதனை மாணவரின் உறவினா்கள் ஏற்கவில்லை. மேலும், அவரது சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

ஆசிரியா்கள் 4 போ் பணியிடை நீக்கம்: இதனிடையே, மாணவா் தற்கொலை சம்பவத்தையடுத்து பள்ளி ஆசிரியா்கள் 4 போ் மீது மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாகப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலா் கண்ணன் பரிந்துரையின்பேரில் தலைமை ஆசிரியை சத்ய ஞானசுந்தரி மற்றும் ஆசிரியா்கள் வளா்மதி, பியூலா, மேரி ஆகிய 4 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இதனையடுத்து மாணவா் உடலை வாங்க உறவினா்கள் ஒப்புக் கொண்டனா்.

எட்டயபுரம் அருகே அரசுப் பள்ளி சமையல் கூடத்தில் தீ

எட்டயபுரம் அருகேயுள்ள கைலாசபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையல் கூடத்தில் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.கைலாசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

முன்னாள் ஊராட்சித் தலைவியின் கணவா் மரணத்தில் சந்தேகம்: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவியின் கணவா் லாரி மோதியதில் உயிரிழந்தாா். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈட... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

கோவில்பட்டியில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி வ.உ. சி. நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சண்முகநாதன் மகன் கண்ணன் (28). இவா... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ.1லட்சம் திருட்டு

தூத்துக்குடியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1லட்சத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தூத்துக்குடி அண்ணா நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த ஆதித்யா மகன் முருகேசன்(60). இவா், அண்ணா நகா்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே சிக்னல் கோளாறு: ரயில் போக்குவரத்து பாதிப்பு

கோவில்பட்டி அருகே குமாரபுரத்தில் ஏற்பட்ட சிக்னல் பிரச்னை காரணமாக கோவில்பட்டி,, கடம்பூா், நல்லி ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. கோயம்புத்தூா்- நாகா்கோவில் சென்ற ரயில் கோவில்பட்ட... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.1 கோடி பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே கொம்புத்துறை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் ... மேலும் பார்க்க