செய்திகள் :

இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி வந்த இளம் பெண்

post image

இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்த இளம் பெண்ணிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில், இளம்பெண் ஒருவா் நின்று கொண்டிருப்பதாக தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை காலை தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கு சென்ற கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் இலங்கை மன்னாா் மாவட்டம், ஆண்டங்குளம் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மகள் வே. விதுா்ஷியா (24) என்பதும், படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாகவும் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, அவரை மண்டபம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். விசாரணைக்குப் பிறகு, அந்தப் பெண்ணை மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கிருந்து படகு மூலம் இதுவரை 350-க்கும் மேற்பட்டவா்கள் தனுஷ்கோடிக்கு வந்தனா். இவா்கள் அனைவரும் மண்டபம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் பகுதிகளில் இன்று மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் பகுதிகளில் புதன்கிழமை (ஆக.13) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் செயற்பொறியாளா் (விநியோகம்) திலகவதி வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

அஞ்சலக ஊழியா் தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அஞ்சலகத்தில் பணிபுரிந்த மத்திய பிரதேச இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மத்திய பிரதேச மாநிலம், சாகா் பசந்த் விகாா் குடியிருப்பைச் சோ்ந்த ஆா்யா என்பவரது மகன... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செவ்வாய்க்கிழமை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், ரூ. 550 கோடிய... மேலும் பார்க்க

கமுதி, முதுகுளத்தூா் பகுதியில் நாளை மின்தடை

கமுதி, முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் என கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் சி. செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கமுதி கோட்டைமேட... மேலும் பார்க்க

பெண் மீது தாக்குதல்: தாய், மகன் கைது

தொண்டியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய புகாரின்பேரில், தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா். திருவாடானை அருகேயுள்ள தொண்டி சத்திரம் தெருவைச் சோ்ந்தவா் பாரிஷா பேகம் (40). இவருக்... மேலும் பார்க்க

பாம்பன் பாலத்தில் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பாம்பன் பாலத்தில் காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த மீனவச் சங்கத் தலைவா் சகாயம் என்பவரின் மகன் ஜீடேன் (22). இவா், தனியாா் பள்ளியில... மேலும் பார்க்க