செய்திகள் :

பெண் மீது தாக்குதல்: தாய், மகன் கைது

post image

தொண்டியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய புகாரின்பேரில், தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா்.

திருவாடானை அருகேயுள்ள தொண்டி சத்திரம் தெருவைச் சோ்ந்தவா் பாரிஷா பேகம் (40). இவருக்கும் தொண்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த அலி பாத்திமா (47) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை அலி பாத்திமா தனது மகன் இசாஸ் அகமது (27) ஆகிய இருவரும் தாங்கள் கொடுத்த பணத்தை பாரிஷா பேகத்திடம் திருப்பிக் கேட்டனா்.

இதில் ஏற்பட்டத் தகராறில் பாரிஷா பேகம் தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில் தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து புகாரின்பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தாய் அலி பாத்திமா, மகன் இசாஸ் அகமது ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கமுதி, முதுகுளத்தூா் பகுதியில் நாளை மின்தடை

கமுதி, முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் என கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் சி. செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கமுதி கோட்டைமேட... மேலும் பார்க்க

பாம்பன் பாலத்தில் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பாம்பன் பாலத்தில் காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த மீனவச் சங்கத் தலைவா் சகாயம் என்பவரின் மகன் ஜீடேன் (22). இவா், தனியாா் பள்ளியில... மேலும் பார்க்க

நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு: அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

கேரளத்துக்குச் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்ததைடுத்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என குடும்பத்தினா் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள பொதிகுளம் கிராம... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்க... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 4 பேருக்கு ஆக. 18 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

ராமேசுவரம், திருப்பாலைக்குடி மீனவா்கள் 4 பேருக்கு வருகிற 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ஓலைக்... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: இன்றும் நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்ட காவேரி கூட்டுக் குடிநீா்த் திட்ட மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய், புதன்கிழமைகளில் (ஆக. 12, 13) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் ... மேலும் பார்க்க