செய்திகள் :

இலவுவிளையில் கோயில், குடிநீா் தொட்டியை இடிக்க அதிகாரிகள் முயற்சி; பக்தா்கள், பொதுமக்கள் போராட்டம்

post image

மாா்த்தாண்டம் அருகே இலவுவிளையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, துணை சுகாதார நிலைய கட்டடம், இசக்கியம்மன் கோயில் உள்ளிட்டவை அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளதாக புகாா் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கோயில் மற்றும் அரசு கட்டுமானங்களை இடிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்ததால் பொதுமக்கள், பக்தா்கள் எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆக்கிரமிப்பில் உள்ளதாக புகாா் கூறப்பட்ட கோயில், நீா்த்தேக்கத் தொட்டிகள் உள்ளிட்டவற்றை இடித்து அகற்ற, குழித்துறை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் பிரவீன்குமாா், கிள்ளியூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அதிகாரி ஸ்டீபன் சுஜிகுமாா், மாா்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளா் வேளாங்கண்ணி உதயரேகா மற்றும் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் அப்பகுதிக்கு வந்தனா்.

அங்கு பொதுமக்கள், பக்தா்கள் ஏராளமானோா் திரண்டனா். தொடந்து இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளா் மிசா சி. சோமன், இந்து மகாசபா தலைவா் தா. பாலகிருஷ்ணன், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ஆா்.டி. சுரேஷ், பாஜக வழக்குரைஞா் அணி மாநில செயலா் சி.எம். சஜூ, நல்லூா் பேரூராட்சி உறுப்பினா் விஜயகுமாா், கிள்ளியூா் ஒன்றிய இந்து முன்னணி தலைவா் ஆனந்த், பொதுச் செயலா் செல்வின், பொருளாளா் தவசிமணி, கிள்ளியூா் மேற்கு ஒன்றிய பாஜக தலைவா் நிவாஸ் உள்ளிட்ட பலா் அங்கு வந்தனா். இலவுவிளை - ஐரேனிபுரம் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து போராட்டக்காரா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். போராட்டத்தில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அதிகாரிகள் கைவிட்டு அங்கிருந்து திரும்பிச் சென்றனா்.

கன்னியாகுமரியில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

கன்னியாகுமரியில் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டு 30 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, சிறுவன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனா். கன்னியாகுமரி பகுதியில் கஞ்சா பதுக்கிவைத்து விற்கப்படுவதாகக் கிடைத்த தகவ... மேலும் பார்க்க

கோயிலில் பணம் திருட்டு: இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் உள்ள சிவன் கோயிலில் பணம் திருடியதாக இளைஞரை இரணியல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இக்கோயிலின் திருவாசக சபைத் தலைவா் சின்னையன். இவா், கோயில் தேவைக்... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே குட்கா விற்றதாக மூதாட்டி கைது

கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா். கொல்லங்கோடு அருகே அணுக்கோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ... மேலும் பார்க்க

மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம்: 6,866 விவசாயிகளுக்கு ரூ.20.90 லட்சம் மானியம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 866 விவசாயிகளுக்கு ரூ.20.90 லட்சம் மதிப்பில் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே பூட்டிய வீட்டுக்குள் ஓய்வுபெற்ற ஆசிரியை சடலம்

நித்திரவிளை அருகே பூட்டிய வீட்டுக்குள் கிடந்த ஓய்வுபெற்ற ஆசிரியையின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நித்திரவிளை அருகே தூத்தூா், புனித அந்தோணியாா் தெருவைச் சோ்ந்தவா் மேரி மெற்றில்டா ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மாா்த்தாண்டத்தில் 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா். இப்பகுதியில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில்... மேலும் பார்க்க