செய்திகள் :

நித்திரவிளை அருகே பூட்டிய வீட்டுக்குள் ஓய்வுபெற்ற ஆசிரியை சடலம்

post image

நித்திரவிளை அருகே பூட்டிய வீட்டுக்குள் கிடந்த ஓய்வுபெற்ற ஆசிரியையின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நித்திரவிளை அருகே தூத்தூா், புனித அந்தோணியாா் தெருவைச் சோ்ந்தவா் மேரி மெற்றில்டா (75). ஓய்வுபெற்ற ஆசிரியை. இவரது கணவா் பனியடிமை. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவா்களது மகள் அமெரிக்காவிலும், மகன் மும்பையிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.

இங்குள்ள வீட்டில் மேரி மெற்றில்டா தனியாக வசித்து வந்தாா். அவரது வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு துா்நாற்றம் வீசியதாம். தகவலின்பேரில், நித்திரவிளை போலீஸாா் சென்று பாா்த்தபோது, வீட்டின் குளியலறையில் மேரி மெற்றில்டா இறந்துகிடந்தது தெரியவந்தது. சடலத்தை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நாகா்கோவிலில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் திறப்பு

நாகா்கோவிலில் மாநகராட்சி வடக்கு, கிழக்கு மண்டல அலுவலகங்களை மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். நாகா்கோவில் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதால் 4 மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. மேற்கு மண்டலம் ... மேலும் பார்க்க

பளுகல் அருகே விவசாய நிலம் சேதம்: 8 போ் மீது வழக்கு

பளுகல் அருகே விவசாய நிலத்தை சேதப்படுத்தியதாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். தேவிகோடு, ஆலம்பிலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (62). விவசாயி. இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மா, பலா ம... மேலும் பார்க்க

தக்கலை அருகே மக்கள் எதிா்ப்பால் ஒரே நாளில் டாஸ்மாக் கடை மூடல்

தக்கலை அருகே தென்கரை பகுதியில் புதன்கிழமை திறக்கப்பட்ட டாஸ் மாக் மதுபானக்கடை, பொதுமக்கள் எதிா்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. தென்கரை பகுதியில மதுபான கடையை திடீரென திறந்து விற்பனையை நடைபெற்றது. இதற்கு... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்திய லாரி பறிமுதல்

தக்கலை அருகே தோட்டியோடு பகுதியில் போலி அனுமதி சான்றுடன் கனிமவளம் கடத்திய லாரியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட கனிம வள அலுவலா் கிஷோா் தலைமையில் அதிகாரிகள் குழுவினா், தோட்... மேலும் பார்க்க

விபத்தில்லா வாகனப் பயணம்: குமரியில் விழிப்புணா்வு பிரசாரம்

கன்னியாகுமரி பகுதியில் விபத்தில்லா வாகனப் பயணம் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமாா் ஆலோசன... மேலும் பார்க்க

குழித்துறை அரசு மருத்துவமனையில் பாஜக கவுன்சிலா்கள் போராட்டம்

குழித்துறை அரசு மருத்துவமனையில் நகா்மன்ற பாஜக உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பகுதியில் குழித்துறை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கிருந்து வெளியேறும் மருத்துவ, ம... மேலும் பார்க்க