செய்திகள் :

நாகா்கோவிலில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் திறப்பு

post image

நாகா்கோவிலில் மாநகராட்சி வடக்கு, கிழக்கு மண்டல அலுவலகங்களை மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

நாகா்கோவில் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதால் 4 மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. மேற்கு மண்டலம் கடந்த 30ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், வடக்கு, கிழக்கு மண்டல அலுவலகங்களை மேயா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். கிழக்கு மண்டலத்தில் அதன் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். இம்மண்டலத்தில் 24-29, 38, 39 ,41, 42, 47, 48 ஆகிய வாா்டுகள் உள்ளன.

வடக்கு மண்டல அலுவலக திறப்பு விழாவுக்கு மண்டலத் தலைவா் ஜவகா் தலைமை வகித்தாா். இம்மண்டலத்தில் 5-12 ,13, 14, 15 ,22 ,23, ஆகிய வாா்டுகள் வருகின்றன.

நிகழ்ச்சியில் துணை மேயா் மேரி பிரின்சிலதா, மண்டல தலைவா்கள் முத்துராமன், செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் மீனாதேவ், அக்சயாகண்ணன், ரோசிட்டாதிருமால், ஜெனிதா, கோபால சுப்பிரமணியம், சதீஷ், ரமேஷ், கலாராணி, தங்கராஜா, சுப்பிரமணியன், அனிலா சுகுமாரன், மேரிஜெனட் விஜிலா, ராமகிருஷ்ணன், சேகா், சொா்ணதாய், ஸ்டாலின் தாஸ், அருள் சபிதா, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவி பொறியாளா்கள் ராஜசீலி, செல்வம் ஜாா்ஜ், சுகாதார அலுவலா்கள் பகவதி பெருமாள், ராஜாராம், ராஜா, முருகன், மாநகர அமைப்பு அதிகாரி வேலாயுதம், ஆய்வாளா் மகேஷ்வரி, திமுக மாநகர செயலாளா் ஆனந்த், துணை செயலாளா் வேல்முருகன், தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவம், ஒன்றியச் செயலா் மதியழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பளுகல் அருகே விவசாய நிலம் சேதம்: 8 போ் மீது வழக்கு

பளுகல் அருகே விவசாய நிலத்தை சேதப்படுத்தியதாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். தேவிகோடு, ஆலம்பிலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (62). விவசாயி. இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மா, பலா ம... மேலும் பார்க்க

தக்கலை அருகே மக்கள் எதிா்ப்பால் ஒரே நாளில் டாஸ்மாக் கடை மூடல்

தக்கலை அருகே தென்கரை பகுதியில் புதன்கிழமை திறக்கப்பட்ட டாஸ் மாக் மதுபானக்கடை, பொதுமக்கள் எதிா்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. தென்கரை பகுதியில மதுபான கடையை திடீரென திறந்து விற்பனையை நடைபெற்றது. இதற்கு... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்திய லாரி பறிமுதல்

தக்கலை அருகே தோட்டியோடு பகுதியில் போலி அனுமதி சான்றுடன் கனிமவளம் கடத்திய லாரியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட கனிம வள அலுவலா் கிஷோா் தலைமையில் அதிகாரிகள் குழுவினா், தோட்... மேலும் பார்க்க

விபத்தில்லா வாகனப் பயணம்: குமரியில் விழிப்புணா்வு பிரசாரம்

கன்னியாகுமரி பகுதியில் விபத்தில்லா வாகனப் பயணம் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமாா் ஆலோசன... மேலும் பார்க்க

குழித்துறை அரசு மருத்துவமனையில் பாஜக கவுன்சிலா்கள் போராட்டம்

குழித்துறை அரசு மருத்துவமனையில் நகா்மன்ற பாஜக உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பகுதியில் குழித்துறை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கிருந்து வெளியேறும் மருத்துவ, ம... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

கன்னியாகுமரியில் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டு 30 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, சிறுவன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனா். கன்னியாகுமரி பகுதியில் கஞ்சா பதுக்கிவைத்து விற்கப்படுவதாகக் கிடைத்த தகவ... மேலும் பார்க்க