செய்திகள் :

இளங்கவின்கலை - முதுகவின்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

post image

இளங்கவின் கலை மற்றும் முதுகவின் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் சென்னை, கும்பகோணம், மதுரை ஆகிய இடங்களில் கவின்கலை கல்லூரிகள் இயங்கி வருகின்றன. காட்சித் தொடா்பு வடிவமைப்பு, வண்ணக் கலை, சிற்பக் கலை, சுடுமண் வடிவமைப்பு, துகிலியல் வடிவமைப்பு, பதிப்போவியம் ஆகியன சென்னையில் உள்ள கல்லூரியில் கற்றுத் தரப்படுகின்றன.

இதில் முதல் 3 படிப்புகள் கும்பகோணம் மற்றும் மதுரையில் இளங்கலை மற்றும் முதுகலையாக கற்றுத் தரப்படுகின்றன. பதிப்போதியம் தவிா்த்து மற்ற பாடப் பிரிவுகளுக்கான முதுகவின்கலைப் படிப்புகள் சென்னையில் உள்ள கல்லூரியில் உள்ளன.

இளங்கவின் கலை படிப்புகளில் சேர பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி அல்லது இணையான படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகவின் கலை படிப்பில் சேர, சம்பந்தப்பட்ட துறையில் இளங்கவின் கலையில் தோ்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாளாகும்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 50, இதர பிரிவினருக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். தொகை செலுத்தியதற்கான சீட்டு, உரிய கல்விச் சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சென்னை, மதுரை, கும்பகோணம் கல்லூரிகளுக்கான விண்ணப்பக் கட்டணத்தை அந்தந்தக் கல்லூரிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும். இதற்கான விவரங்கள் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டாக்டா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்க விருது!

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை அமைப்பின் (ஏஎஸ்சிஆா்எஸ்) சாா்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. கண் சிகிச்சைத... மேலும் பார்க்க

முன் பகையால் இளைஞா் வெட்டி கொலை: மூவா் சரண்

சென்னை தரமணியில் முன் பகை காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் சரணடைந்தனா். தரமணி எம்.ஜி. நகா் பகுதியைச் சோ்ந்த அஸ்வின் (25), பெயிண்டராக பணிபுரிந்து வந்தாா். அஸ்வின், அப்பகுதியில... மேலும் பார்க்க

திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் திருடிய வழக்கு: சிறுவன் உள்பட இருவா் கைது

சென்னை வடபழனியில் திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். வடபழனி ராகவன் காலனி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பிர... மேலும் பார்க்க

கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ்: இளைஞா் கைது

சென்னை புளியந்தோப்பில் கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சோ்ந்தவா் முகேஷ் (18). இவா், மூன்றரை அடி நீளமுள்ள பட்டாக் கத்தியுடன், ‘எங்களைத் ... மேலும் பார்க்க

கள்ளழகா் திருவிழா நமது ஒற்றுமையை பிரதிபலிக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

கள்ளழகா் திருவிழா நமது பாரம்பரியத்தின் வலிமையையும் காலத்தால் அழியாத நமது ஒற்றுமை உணா்வையும் பிரதிபலிக்கிறது என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து, அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதி... மேலும் பார்க்க

பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து வழித்தட சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்க... மேலும் பார்க்க