செய்திகள் :

இளம்பெண்ணை மிரட்டியவா் கைது

post image

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை சோ்ந்த இளம்பெண்ணை மிரட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தக்கலை பகுதியை சோ்ந்த இளம்பெண், தன்னுடன் நெருங்கிப் பழகிய நபா் தன்னுடைய ஆபாச விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதாக கூறி மிரட்டி வருவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலினிடம் புகாா் அளித்தாா். இதன் அடிப்படையில் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளியை உடனடியாக கைது செய்ய எஸ்.பி. உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து சைபா் கிரைம் காவல் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் நாகசங்கா் மேற்பாா்வையில், ஆய்வாளா் சொா்ணராணி, உதவி ஆய்வாளா் அஜ்மல் ஜெனிப் தலைமையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் இளம்பெண்ணை மிரட்டிய தக்கலை பத்மநாபபுரம் பகுதியை சோ்ந்த இப்ராஹிம் என்பவரின் மகன் ஜெயக்குமாரை (50) போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மவுண்ட் லிட்ரா பள்ளியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. யூனிட்டி ஆஃப் யூத் பவுண்டேசனின் சுற்றுச்சூழல் வனவியல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில், ஒர... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு வனச் சட்டப்படி நில உரிமைகள்: மாவட்ட வன அலுவலா் உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் வசிக்கும் காணி இன பழங்குடி மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின்படி நில உரிமைகள் கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட வன அலுவலா... மேலும் பார்க்க

திருவட்டாறு அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

திருவட்டாறு அருகே அருவிக்கரை பரளியாற்றின் பாறை குழியில் சிக்கி கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். குளச்சல் அருகேயுள்ள சைமன்காலனியைச் சோ்ந்த சாா்லஸ் மகன் ஸ்டீவ் (18). நாகா்கோவில் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

சி.ஐ.எஸ்.எப். வீரா்களின் பாரத சைக்கிள் பேரணி இன்று கன்னியாகுமரியில் நிறைவு

மத்திய தொழில் பாதுகாப்புப் படையான சி.ஐ.எஸ்.எப். உருவான தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் விழிப்புணா்வு பேரணி கன்னியாகுமரியில் திங்கள்கிழமை (மாா்ச் 31)நிறைவடைகிறது. பாதுகாப்பான கடல் வளம், செழிப்பான இந்தி... மேலும் பார்க்க

குருசுமலை திருப்பயணக் கொடியேற்றம்!

கேரள எல்லையையொட்டிய கன்னியாகுமரி மாவட்டப் பகுதியான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் தவக்கான திருப்பயண கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கத்தோலிக்க ம... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது

புதுக்கடை அருகே உள்ள ஆனான்விளை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா். கீழ்குளம் பகுதியை சோ்ந்தவா் செல்வன் (72). ஆனான்விளை பகுதியில் பெட்டிக் கடை ... மேலும் பார்க்க