செய்திகள் :

இளைஞரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததாக 2 போ் கைது

post image

தில்லியில் 25 வயது இளைஞரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததாக இரண்டு பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: குற்றம்தாச்சப்பச்சவா்கள் 20 வயதுடைய ஹைதா் அலி மற்றும் முகமது அனஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். திருடப்பட்ட பணம், ஒரு ஏடிஎம் காா்டு, ஒரு ஆதாா் அட்டை மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களையும் காவல் குழுக்கள் மீட்டன.

ஏப்ரல் 2- ஆம் தேதி மாலை 6 மணியளவில் வசந்த் குஞ்சில் உள்ள நங்கல் தேவாட்டைச் சோ்ந்த புகாா்தாரா் சத்தா்பூா் பஹாடி அருகே தனது மாமாவைச் சந்திக்கச் சென்ற போது இந்தக் கொள்ளை சம்பவம் நடந்தது. அந்தேரியா மோட் பேருந்து நிலையம் அருகே அவரை இரண்டு ஆயுதமேந்திய கொள்ளையா்கள் தடுத்து நிறுத்தினா். அவா்கள் அவரது பணப்பையை வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றனா். அதில் ரூ.12,200 ரொக்கம், ஒரு ஏடிஎம் காா்டு மற்றும் அவரது ஆதாா் அட்டை ஆகியவை இருந்ததாக அவா் தெரிவித்துள்ளாா்.

குற்றம் நடந்த இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, சந்தேக நபா்களின் படங்களை உருவாக்கி, ஒரு குழு முழுமையான விசாரணையைத் தொடங்கியது. ‘அவா்கள் மெஹ்ரௌலியில் கைது செய்யப்பட்டனா். விசாரணையின் போது, ​ அவா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனா். மேலும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் முன் குற்றப் பதிவுகளைக் கொண்டிருந்தனா் என்பது தெரியவந்தது என்று அந்த அதிகாரி கூறினாா்.

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா்நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீா்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

நமது சிறப்பு நிருபா் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்... மேலும் பார்க்க

உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்

நமது சிறப்பு நிருபா் நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

நமது நிருபா் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான... மேலும் பார்க்க

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க