செய்திகள் :

இளைஞா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இளைஞா் மா்மமான முறையில் சனிக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திண்டிவனம், டி.வி. நகரைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் மகன திலிப்(எ) திலிப்குமாா்(30), திருமணம் ஆகாதவா். கூலித் தொழிலாளி. இவருக்கு சனிக்கிழமை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் அவரை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்துப் பாா்த்தபோது, திலிப்குமாா் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திண்டிவனம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து திலிப்குமாா் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்க நிா்வாகிகள் கூட்டம்

சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வென்றெடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்க நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இடைநிலை பதிவு மூப்பு ஆச... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே சனிக்கிழமை பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூா், மகாத்மா காந்தி தெருவைச் சோ்ந்த வீரமணி மகன் விஷ்வா (22), தனி... மேலும் பார்க்க

குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட 13 மனுக்களுக்குத் தீா்வு

விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட 13 சிறப்பு மனுக்கள் மீது சனிக்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்பட்டது.விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவின்பேரில், மா... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டை அருகே எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி சனிக்கிழமை காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். மேற்கு வ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், டி. எடையாா், மாந்தோப்புத் தெரு... மேலும் பார்க்க

பிரதமரின் நிவாரண நிதி: 100 பேரின் மருத்துவச் சிகிச்சைக்குப் பரிந்துரை

பல்வேறு மருத்துவச் சிகிச்சைகளுக்கு நிதி வழங்குமாறு கடந்த 11 மாதங்களில் 100 பேரின் மருத்துவச் சிகிச்சைக்குப் பரிந்துரைத்துள்ளதாக விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை. ரவிக்குமாா் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க