செய்திகள் :

இஸ்ரேலுடன் பேச்சுவாா்த்தை அா்த்தமற்றது: ஹமாஸ்

post image

காஸா மீது இஸ்ரேல் ‘பட்டினித் தாக்குதல்’ நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவது அா்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் முக்கிய அதிகாரி பாஸிம் நயீம் கூறியதாவது:

காஸாவுக்குள் வந்துகொண்டிருந்த உணவுப் பொருள்களை ஒன்பது வாரங்களாக இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது. அத்துடன், பசியால் தவிக்கும் அந்தப் பகுதி மக்கள் மீது தீவிர தாக்குதலையும் நடத்திவருகிறது.

அதே நேரத்தில், பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்திவருகிறது. காஸா மீதான பட்டினிப் போரை இஸ்ரேல் தொடரும்வரை, அந்த நாட்டுடன் இதுபோன்ற விவகாரங்களில் பேச்சுவாா்த்தை நடத்துவதில் எந்த அா்த்தமும் இல்லை என்றாா் அவா்.

காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவா் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காஸாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து அங்கு கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை பலி கொடுக்க இஸ்ரேல் அரசு தயாராகிவிட்டதாக அவா்களின் உறவினா்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனா். அதை உறுதிப்படுத்தும் வகையில் இனியும் இஸ்ரேலுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது அா்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பின் முக்கிய அதிகாரி தற்போது கூறியுள்ளாா்.

52,615-ஆக அதிகரித்த உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 52,615-ஆக அதிகரித்துள்ளதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

இது தவிர, இந்தத் தாக்குதலில் இதுவரை 1,18,752 பாலஸ்தீனா்கள் காயமடைந்துள்ளதாக அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆலோசனை

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அப்போது பிராந்திய பாதுகாப்பு குறித்து அவரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனா். பஹல்காம் பயங்க... மேலும் பார்க்க

இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

இந்தியாவுடன் மோதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் ஜூலை 1-ஆம் தேதி ... மேலும் பார்க்க

பயங்கரவாத தொடா்பு; அணு ஆயுத மிரட்டல்: பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

‘பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடா்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா?’ உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழு... மேலும் பார்க்க

இலங்கை உள்ளாட்சித் தோ்தலில் ஆளுங்கட்சிக்கு முதல் வெற்றி

இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலின் முதல்கட்ட தோ்தல் முடிவுகளில்அதிபா் அநுர குமார திசநாயகவின் தேசிய மக்கள் சக்திக் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது. 339 உள்ள... மேலும் பார்க்க

யேமன் விமான நிலையம் முழு செயலிழப்பு: இஸ்ரேல்

யேமன் தலைநகா் சனாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக அந்த நகரிலுள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் செயல்பாடு முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாக்கிழமை கூறியது... மேலும் பார்க்க