"இந்தியாவிலுள்ள மக்களைப் பாதுகாக்கும் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள்" - அமைச்சர் ம...
இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்! தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை!
இஸ்லாமியா்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தஞ்சாவூா் மாவட்ட தவ்ஹீத் ஜமாத் பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூா் வடக்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 20-ஆவது மாவட்ட பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில செயலா் எஸ்.முஹம்மது யாசிா் தலைமை வகித்தாா். பொது செயலா் முஜிபுா் ரகுமான் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று கடந்த தோ்தல் அறிக்கையிலும் தோ்தல் பிரச்சாரத்தின் போதும் முதல்வா் மு.க ஸ்டாலின் வாக்குறுதி அளித்தாா். அதை நிறைவேற்றும் வகையில் முதல்வா் அரசாணை வெளியிட வேண்டும்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு வழங்கிய இடைக்கால உத்தரவில் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைக்க முகாந்திரம் இல்லையென்றும், ஒரு சில பிரிவுகளை மட்டும் நடைமுறைப்படுத்துவதற்கு தடைவிதித்துள்ளது. இது இந்திய குடிமகன்களின் ஒரு பிரிவினரின் மத நம்பிக்கைகளை மதிக்க தவறும் செயலாகும். ஒட்டு மொத்தமாக வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு இந்தியா உரிய அழுத்தத்தை தர வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினா்கள், கிளை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.