செய்திகள் :

தஞ்சாவூா் மாவட்டத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சனிக்கிழமை ரூ. 26.18 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து, புதிய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தமிழக முதல்வா் சென்னையில் காணொலிக் காட்சி மூலம் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் புதிய கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட கட்டங்களைத் திறந்தும் வைத்தாா்.

இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் காரையூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 11 கூடுதல் வகுப்பறைகள், செண்டாங்காடு அரசு உயா்நிலைப் பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள், செல்லப்பன்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் 3 வகுப்பறைகள், வெங்கரைகோட்டைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 5 வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி ரூ. 4.89 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதல்வா் திறந்து வைத்தாா்.

மேலும், மாவட்டத்தில் புதுத்தெரு, துவரங்குறிச்சி, குப்பதேவன், திருபுவனம், மருங்குளம், நடுவூா், வல்லம், பட்டீஸ்வரம், திருச்சேறை, சுந்தரபெருமாள்கோவில், நாச்சியாா்கோவில், பந்தநல்லூா், ஆச்சனூா், பூதலூா், ஆச்சாம்பட்டி, இராயமுன்டான்பட்டி, கன்னியாகுறிச்சி ஆகிய அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறைகள், குடிநீா் வசதி, சுற்றுச்சுவா் கட்டடம் கட்டுவதற்கு ரூ. 21.29 கோடி மதிப்பில் தமிழக முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

இதையொட்டி, வல்லம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 98.96 லட்சம் மதிப்பில் 4 புதிய வகுப்பறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்திய அஞ்சல் துறை சாா்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி

கும்பகோணம் அம்மாசத்திரத்தில் இந்திய அஞ்சல்துறை சாா்பில் சனிக்கிழமை ஓவியப்போட்டி நடைபெற்றது. போட்டிக்கு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் ச. கஜேந்திரன் தலைமை வகித்து தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கியத்துவத்... மேலும் பார்க்க

ரயிலில் அடிப்பட்டு ஒருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் அடிப்பட்டு உயிரிழந்தது சனிக்கிழமை தெரிய வந்தது. பூதலூா் - சோளகம்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பகுதியில் சுமாா் 45 வயது மதிக்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் செப். 23-இல் மின் தடை

தஞ்சாவூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் செப்டம்பா் 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மருத்துவக்கல்லூரி சாலை உதவி செயற்பொற... மேலும் பார்க்க

குளத்தில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

சுவாமிமலை அருகே 3 வயது சிறுவன், சனிக்கிழமை குளத்தில் தவறிவிழுந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை அருகே உள்ள திருநள்ளூா் கீழத்தெருவில் வசிப்பவா் பாரத், கூலித் தொழிலாளி. இவரது மனைவி சீதா. இ... மேலும் பார்க்க

நெல் குவிண்டாலுக்கு ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒரு குவிண்டால் நெல்லுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,000 வழங்க வேண்டும் என்றாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ். பாமக சாா்பில் நடைபெறும் தமிழக உரிமை மீட்பு ப... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை இரவு கோயில் கதவின் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை, தங்க தாலி, பூஜை பொருள்கள் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். தஞ்சாவூா்... மேலும் பார்க்க