செய்திகள் :

உ.பி.யில் காகித ஆலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பலி

post image

உத்தரப் பிரதேசத்தில் காகித ஆலையில் பாய்லர் வெடித்த சம்பவத்தில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், போஜ்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள காகித ஆலையில் வெள்ளிக்கிழமை பாய்லர் வெடித்தது. இந்த சம்பவத்தில் 3 தொழிலாளர்கள் பலியானார்கள்.

பலியானவர்கள் யோகேந்திரா, அனுஜ் மற்றும் அவ்தேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் ஆலையில் பணியில் இருந்தபோது காலை 6 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

திடீரென்று பாய்லர் வெடித்ததால் மூன்று தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டு 50 அடி தூரத்தில் விழுந்தனர் என்று காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

துணை காவல் ஆணையர் சுரேந்திர நாத் திவாரி, தொழிற்சாலை உரிமையாளர் அவ்னீஷ் மோடிநகரில் வசிக்கிறார். ஆலை லேமினேஷன் பேப்பர் தயாரிக்கிறது என்று கூறினார்.

பலியான கூலித் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று திவாரி மேலும் தெரிவித்தார்.

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் அம்பானி!

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி ... மேலும் பார்க்க

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பு... மேலும் பார்க்க

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க