செய்திகள் :

இலுப்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: கல்லூரி மாணவர் பலி

post image

இலுப்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள இந்திராபட்டியைச் சேர்ந்தவர் பாலாஜி(21). இவர் இவரது நண்பர் நவீன் குமார்(18).

இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் இன்று நடைபெறும் இந்திராபட்டி முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் விழாவிற்கு புதிய ஆடை எடுப்பதற்காக நேற்று இரவு இலுப்பூர் வந்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தை பாலாஜி ஒட்டி உள்ளார். இவர்கள் ஒட்டி வந்த வாகனம் இலுப்பூர்-விராலிமலை சாலையில் உள்ள தனியார் எரிவாயு நிறுவனம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதியது.

விழுப்புரம் மாவட்டத்தில் ரமலான் கொண்டாட்டம்

இதில் தலை, கை, கால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்த பாலாஜி நிகழ்வு இடத்திலேயே பலியானார்.

அவரது நண்பர் நவீன் குமார் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு வாகனத்தை ஓட்டி வந்த விபத்தை ஏற்படுத்திய பாக்கியராஜ் சிறிய காயங்களுடன் உயிர்த் தப்பினார்.

இலுப்பூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மொழிக் கொள்கை செயல்பாடு: ஸ்டாலினுக்கு டி.ராஜா பாராட்டு

மொழிக் கொள்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாகச் செயல்படுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா பாராட்டு தெரிவித்தார்.மதுரையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும் ஜிப்லி காா்ட்டூன்!

சமூக ஊடகங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ஜிப்லி காா்ட்டூன் படங்களே நிறைந்திருக்கின்றன. மக்கள் அனைவரும் தங்களின் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் பாணியிலான அனிமேஷன் (வரைகலை) படங்களாக மாற்றி, தங்கள் சமூக ஊ... மேலும் பார்க்க

‘நடந்தாய் வாழி காவிரி’ திட்ட அறிக்கை தயாரிப்பு தீவிரம்: அமைச்சா் துரைமுருகன்

‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது இது... மேலும் பார்க்க

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு முறை விரைவில் அமல்

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் மொத்தம் 3.04 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன.... மேலும் பார்க்க

ரூ.2,200 கோடியில் 770 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும்: அமைச்சா் எ.வ.வேலு

முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் நிகழாண்டு 220 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகள் நான்குவழிச் சாலையாகவும், 550 கி.மீ. சாலைகளை இருவழிச் சாலையாகவும் ரூ.2,200 கோடியில் அகலப்படுத்தி, மே... மேலும் பார்க்க

நகா்ப்புற நீா்நிலைகளைச் சீரமைக்க நிதி: அமைச்சா் கே.என்.நேரு

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்பட்ட நீா்நிலைகளைச் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை கா... மேலும் பார்க்க