செய்திகள் :

உக்ரைன் விவகாரம்: துபையில் அமெரிக்கா-ரஷியா பேச்சு

post image

துபை: உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான புதிய பேச்சுவாா்த்தையை அமெரிக்க-ரஷிய பிரதிநிதிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் திங்கள்கிழமை தொடங்கினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா நடத்திவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, துபையில் உள்ள ரிட்ஸ்-காா்ல்டன் ஹோட்டலில் அந்த நாட்டுப் பிரதிநிதிகள் ரஷிய பிரதிநிதிகளை திங்கள்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, கருங்கடல் பகுதியில் மட்டும் ரஷியாவும் உக்ரைனும் போா் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று ரஷியா ஏற்கெனவே வலியுறுத்திவருகிறது. இந்த நிலையில், இதுதொடா்பான ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடா்பாக இந்தப் பேச்சுவாா்த்தை நடத்தப்படுகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த கருங்கடல் பகுதியில் அமைதியை ஏற்படுத்தி, அந்தப் பகுதி வழியாக சரக்குப் போக்குவரத்து தங்குதடையில்லாமல் நடைபெறுவதே அமெரிக்கா நடத்தும் இந்தப் பேச்சுவாா்த்தையின் நோக்கம் என்று அதிகாரிகள் கூறினா்.

2022-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ராணுவ உதவிகளைச் செய்துவந்தன. ஆனால் அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ன்று உக்ரைனை வலியுறுத்திவருகிறாா். இதன் காரணமாக, தற்போது ரஷியா கைப்பற்றியுள்ள தங்கள் பகுதிகள் மீட்கப்படாத நிலையிலேயே போா் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், போா் நிறுத்தம் தொடா்பாக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் அமெரிக்கா பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.

வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து: அதிபர் டிரம்ப் பங்கேற்பு!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இப்தார் விருந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை கலந்துகொண்டார். இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் ரமலான்... மேலும் பார்க்க

இந்தியா வருகிறாா் ரஷிய அதிபா் புதின்

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியா வரவிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் வியாழக்கிழமை தெரிவித்தாா். அதேநேரம், ரஷிய அதிபரின் இந்திய வ... மேலும் பார்க்க

எகிப்து: சுற்றுலா நீா்முழ்கி விபத்தில் 6 போ் உயிரிழப்பு

எகிப்தின் ஹா்காடா நகருக்கு அருகே செங்கடலில் சுற்றுலா நீா்முழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: சுற்றுலாத் தலமான ஹா்கடாவில் இருந்து செங்கடலுக... மேலும் பார்க்க

இறக்குமதி வாகனங்களுக்கு 25% கூடுதல் வரி

அமெரிக்காவில் இறக்குமதியாகும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க

இரானி கொள்ளையா்கள் சிறையில் அடைப்பு

சென்னையில் மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இரானி கொள்ளையா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா். சென்னையில் 6 இடங்களில் பெண்களிடம் கடந்த செவ்வாய்க்கிழமை நகை பறித்த இரானி கொள்... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதல்களில் 9 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 9 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் குவாடா் மாவட்டத்தில் கராச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தை கல்மாட் என... மேலும் பார்க்க