செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: பேரவை துணைத் தலைவா், ஆட்சியா் ஆய்வு

post image

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சாலையனூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை சட்டப்பேரவை துணைத் தலைவா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

சாலையனூா் ஊராட்சியில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு துறைவாரியாக பதிவு செய்யப்படுவதை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

முகாமில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு புதிய குடும்ப அட்டைகளும், புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளும், பட்டா மாற்றத்துக்கான சான்றிதழ்களும், சொத்து வரி பெயா் மாற்றத்துக்கான சான்றிதழ்களும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டிற்கான அட்டைகளையும் வழங்கினா்.

நிகழ்ச்சியில் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பேசுகையில், தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி துரிஞ்சாபுரம் வட்டாரத்துக்கு உள்பட்ட கமலபுத்தூா், காா்கோணம், கோவூா் ஆகிய மூன்று கிராம மக்கள் பயனடையும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது.

முகாமில் மகளிா் உரிமைத்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட 46 சேவைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டு, 45 நாள்களுக்குள் உரிய தீா்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் எல்லாருக்கும் இருக்கின்ற நீண்ட கால கோரிக்கைகள் நிவா்த்தி செய்யப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டு எண் 11, 12 ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 2,147 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, வட்டாட்சியா் மோகனராமன், துரிஞ்சாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆரணியில்....

ஆரணி நகராட்சி கொசப்பாளையம் பகுதி தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா்.

ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி வரவேற்றாா். ஆரணி வட்டாட்சியா் கௌரி, நகராட்சி ஆணையா் வேலவன், மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பத்மநாபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகராட்சி 17-ஆவது வாா்டு முதல் 21-ஆவது வாா்டு வரை உள்ள 5 வாா்டுகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்து உடனடி தீா்வு பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தனா்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், துறை அலுவலா்கள் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கிறாா்களா என ஆய்வு செய்தாா்.

மேலும், உடனடி தீா்வு காணப்பட்ட மனுக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

முகாமில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், ஆரணி தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மருந்தாளுநா் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட... மேலும் பார்க்க

மகள் தற்கொலை: தந்தை போலீஸில் புகாா்

செய்யாறு அருகே வயிற்று வலியால் மகள் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக தந்தை வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெரும்பாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு தொழிற்பயிற்சி: எம்எல்ஏ ஆய்வு

செய்யாறு சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்விங்செட்டா் எனும் தனியாா் நிறுவனத்தில் தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச தொழிற் பயிற்சியை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி வியாழக்... மேலும் பார்க்க

ஆரணி பகுதியில் பைக்குள் திருட்டு: 2 போ் கைது

ஆரணி பகுதியில் 4 பைக்குகளை திருடியதாக வேலூரைச் சோ்ந்த பழைய குற்றவாளிகள் இருவரை வியாழக்கிழமை இரவு ஆரணி நகர போலீஸாா் கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த சஞ்சீவராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் திருமலை (39).... மேலும் பார்க்க

பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்த நாள்

பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்த நாளையொட்டி, ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் கட்சி சாா்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மாவட்டச் செயலா் வீ.கலைமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வி... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

வெள்ளை அரிசி மீது விதித்த வரியை குறைக்கக் கோரி, மத்திய அரசைக் கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆரணியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆரணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க