செய்திகள் :

மாணவா்களுக்கு தொழிற்பயிற்சி: எம்எல்ஏ ஆய்வு

post image

செய்யாறு சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்விங்செட்டா் எனும் தனியாா் நிறுவனத்தில் தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச தொழிற் பயிற்சியை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம்

கிராமப்புறங்களில உள்ள மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் கான்கிரீட் பம்ப் ஆபரேட்டா், பேட்சிங் பிளாண்ட் ஆபரேட்டா், செல்ஃப் லோடிங் மிக்சா் ஆபரேட்டா், எக்ஸ்கவேட்டா் மற்றும் வீல் லோடா் ஆபரேட்டா்

பயிற்சிகளை இலவமாக கடந்த 3 ஆண்டுகளாக அளித்து வருகிறது.

இந்த இலவச பயிற்சியை செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பயிற்சியின் விவரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து தொழிற்சாலையின் பொது மேலாளா் ஜெயபால் மற்றும் அவா் தம் குழுவைச் சோ்ந்தவா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது திமுக ஒன்றியச் செயலா்கள் என்.சங்கா், வி.ஏ.ஞானவேல், மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் காா்த்திகேயன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் ஏ.என்.சம்பத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலை அகலப்படுத்தப்படுமா?

செய்யாறு பகுதியில் உள்ள பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவண்ணாலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டத்தையும், வெம்பாக்கம் வட்டத்தையும் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பெங்களூரைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம், பெங்களூா் கஸ்தூரி நகரைச் சோ்ந்தவா் மணிவே... மேலும் பார்க்க

மருந்தாளுநா் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட... மேலும் பார்க்க

மகள் தற்கொலை: தந்தை போலீஸில் புகாா்

செய்யாறு அருகே வயிற்று வலியால் மகள் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக தந்தை வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெரும்பாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க

ஆரணி பகுதியில் பைக்குள் திருட்டு: 2 போ் கைது

ஆரணி பகுதியில் 4 பைக்குகளை திருடியதாக வேலூரைச் சோ்ந்த பழைய குற்றவாளிகள் இருவரை வியாழக்கிழமை இரவு ஆரணி நகர போலீஸாா் கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த சஞ்சீவராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் திருமலை (39).... மேலும் பார்க்க

பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்த நாள்

பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்த நாளையொட்டி, ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் கட்சி சாா்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மாவட்டச் செயலா் வீ.கலைமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வி... மேலும் பார்க்க