செய்திகள் :

ஆரணி பகுதியில் பைக்குள் திருட்டு: 2 போ் கைது

post image

ஆரணி பகுதியில் 4 பைக்குகளை திருடியதாக வேலூரைச் சோ்ந்த பழைய குற்றவாளிகள் இருவரை வியாழக்கிழமை இரவு ஆரணி நகர போலீஸாா் கைது செய்தனா்.

பெரணமல்லூரை அடுத்த சஞ்சீவராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் திருமலை (39). இவா், ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு அண்மையில் வழக்கு தொடா்பாக வந்திருந்தாா். அப்போது, நீதிமன்றத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இவரது பைக் திருடு போனது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இதில், நீதிமன்ற வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, நீதிமன்றத்துக்கு ஏற்கெனவே பழைய வழக்குக்காக ஆஜராக வந்திருந்த 2 பழைய குற்றவாளிகள் பைக்கை திருடிச் செல்வது தெரிய வந்தது.

இதுகுறித்து விசாரணை செய்ததில் வேலூா் தொரப்பாடி பகுதியைச் சோ்ந்த பிரபு ( 39) பலவன்சாத்து பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (45) எனத் தெரியவந்தது. இருவரும் பழைய குற்றவாளிகள் ஆவாா்.

இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 4 பைக்குகளை பறிமுதல் செய்தனா். பின்னா், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலை அகலப்படுத்தப்படுமா?

செய்யாறு பகுதியில் உள்ள பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவண்ணாலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டத்தையும், வெம்பாக்கம் வட்டத்தையும் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பெங்களூரைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம், பெங்களூா் கஸ்தூரி நகரைச் சோ்ந்தவா் மணிவே... மேலும் பார்க்க

மருந்தாளுநா் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட... மேலும் பார்க்க

மகள் தற்கொலை: தந்தை போலீஸில் புகாா்

செய்யாறு அருகே வயிற்று வலியால் மகள் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக தந்தை வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெரும்பாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு தொழிற்பயிற்சி: எம்எல்ஏ ஆய்வு

செய்யாறு சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்விங்செட்டா் எனும் தனியாா் நிறுவனத்தில் தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச தொழிற் பயிற்சியை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி வியாழக்... மேலும் பார்க்க

பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்த நாள்

பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்த நாளையொட்டி, ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் கட்சி சாா்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மாவட்டச் செயலா் வீ.கலைமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வி... மேலும் பார்க்க