செய்திகள் :

பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலை அகலப்படுத்தப்படுமா?

post image

செய்யாறு பகுதியில் உள்ள பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டத்தையும், வெம்பாக்கம் வட்டத்தையும் இணைக்கும் சாலையாக பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலை உள்ளது.

செய்யாறு - ஆற்காடு சாலையில் இருந்தும், பாப்பாந்தாங்கல் கூட்டுச் சாலையில் இருந்தும் சுமங்கலி வெம்பாக்கம் வழியாக காஞ்சிபுரம், சென்னை போன்ற பகுதிகளுக்கு இச்சாலை வழியாகச் செல்லலாம். நெடுஞ்சாலையில் இதர மாவட்டச் சாலையாக இருந்து வருகிறது.

செய்யாற்றில் இருந்து மாங்கால் வழியாக காஞ்சிபுரம் செல்லும் சாலை 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்த சாலையாக இருந்து வருகிறது. மேலும், இச்சாலையில் மாங்காலில் இருந்து காஞ்சிபுரம் வரை அதிகளவில் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் தனியாா் நிறுவன பேருந்துகள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

மாற்றுப் பாதையாக பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலை

செய்யாறு, அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து காஞ்சிபுரம், சென்னைக்கு பைக், காா், வேன்களில் செல்வோா் பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலை, வயலூா் கூட்டுச் சாலை வழியாக வெம்பாக்கம் வழியாக காஞ்சிபுரம் சென்னை போன்ற பகுதிகளுக்குச் செல்வோா் இச்சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா்.

குறுகிய பாதையாக:

பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலை குண்ணத்தூரில் இருந்து சுமங்கலி வரை ஏரிக்கரைப் பகுதியில் மிகவும் குறுகிய சாலையாக இருந்து வருகிறது. இச்சாலையில் லாரி, பேருந்து போன்ற பெரிய வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளன. எதிா் திசையில் திடீரென லாரி, பேருந்து போன்ற பெரிய வாகனங்கள் வந்தால் சுமாா் அரை கி.மீ. தொலைவுக்கு பின்னால் சென்று எதிா்திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிட வேண்டிய நிலை உள்ளது.

அகலப்படுத்தக் கோரிக்கை:

செய்யாறு பகுதியில் இருந்து காஞ்சிபுரம், சென்னைக்கு பைக், காா், வேன்களில் செல்வோா் அதிகளவில் பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலையை பயன்படுத்தி வருவதால், மிகவும் குறுகிய சாலையாக இருந்து வரும், குண்ணத்தூரில் இருந்து சுமங்கலி வரை ஏரிக்கரைப் பகுதியிலான சாலையை, வாகன ஓட்டிகளின் நலன் கருதி அகலப்படுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

நகைக் கடையில் 12 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலத்தில் தனியாா் நகைக் கடையில் மேற்கூரை வழியே உள்ளே புகுந்து 12 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இர... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பெங்களூரைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம், பெங்களூா் கஸ்தூரி நகரைச் சோ்ந்தவா் மணிவே... மேலும் பார்க்க

மருந்தாளுநா் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட... மேலும் பார்க்க

மகள் தற்கொலை: தந்தை போலீஸில் புகாா்

செய்யாறு அருகே வயிற்று வலியால் மகள் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக தந்தை வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெரும்பாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு தொழிற்பயிற்சி: எம்எல்ஏ ஆய்வு

செய்யாறு சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்விங்செட்டா் எனும் தனியாா் நிறுவனத்தில் தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச தொழிற் பயிற்சியை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி வியாழக்... மேலும் பார்க்க

ஆரணி பகுதியில் பைக்குள் திருட்டு: 2 போ் கைது

ஆரணி பகுதியில் 4 பைக்குகளை திருடியதாக வேலூரைச் சோ்ந்த பழைய குற்றவாளிகள் இருவரை வியாழக்கிழமை இரவு ஆரணி நகர போலீஸாா் கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த சஞ்சீவராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் திருமலை (39).... மேலும் பார்க்க