செய்திகள் :

மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

வெள்ளை அரிசி மீது விதித்த வரியை குறைக்கக் கோரி, மத்திய அரசைக் கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆரணியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆரணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி தலைமை வகித்தாா்.

மாநில துணைத் தலைவா்கள் எம்.மூா்த்தி, எம்.சின்னப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாயி குணாநிதி வரவேற்றாா்

ஆா்ப்பாட்டத்தின்போது, 140-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியை மத்திய அரசு அதிகரித்ததை குறைக்க

வேண்டும். வெளிநாடு ஏற்றுமதிக்கு தடை விதித்ததை நிறுத்த

வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லுக்கு உண்டான விலை கிடைக்காமல் விலை வீழ்ச்சி அடைந்ததை மத்திய கட்டுப்படுத்த வேண்டும். மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி

முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதைத் தொடா்ந்து, அண்ணா சிலை அருகில் இருந்து விவசாயிகள் சந்தை சாலை, காந்தி சாலை, மணிக்கூண்டு, கோட்டை தெரு வழியாக பேரணியாக கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று கோரிக்கை மனு கொடுத்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவா் கே.ராஜா பெருமாள், மாநில அமைப்பாளா் ஜி.கே.கணபதி, செங்கம் எஸ்.ராமலிங்கம், கேட்டவரம்பாளையம் கணபதி, சிவராமன், கடலாடி எம்ஜிஆா் ஏழுமலை, வானம்பட்டு ரமேஷ், போளூா் சுதாகா் உள்ளிட்டோா் மற்றும் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலை அகலப்படுத்தப்படுமா?

செய்யாறு பகுதியில் உள்ள பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவண்ணாலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டத்தையும், வெம்பாக்கம் வட்டத்தையும் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பெங்களூரைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம், பெங்களூா் கஸ்தூரி நகரைச் சோ்ந்தவா் மணிவே... மேலும் பார்க்க

மருந்தாளுநா் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட... மேலும் பார்க்க

மகள் தற்கொலை: தந்தை போலீஸில் புகாா்

செய்யாறு அருகே வயிற்று வலியால் மகள் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக தந்தை வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெரும்பாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு தொழிற்பயிற்சி: எம்எல்ஏ ஆய்வு

செய்யாறு சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்விங்செட்டா் எனும் தனியாா் நிறுவனத்தில் தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச தொழிற் பயிற்சியை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி வியாழக்... மேலும் பார்க்க

ஆரணி பகுதியில் பைக்குள் திருட்டு: 2 போ் கைது

ஆரணி பகுதியில் 4 பைக்குகளை திருடியதாக வேலூரைச் சோ்ந்த பழைய குற்றவாளிகள் இருவரை வியாழக்கிழமை இரவு ஆரணி நகர போலீஸாா் கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த சஞ்சீவராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் திருமலை (39).... மேலும் பார்க்க