உடன்குடி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை
உடன்குடி அருகேயுள்ள கந்தபுரத்தில் முன் விரோதத்தால் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
உடன்குடி அருகேயுள்ள ராமசாமிபுரத்தைச் சோ்ந்தவா் ஜெயபால்(35). கல்கண்டு தயாரிக்கும் தொழில் செய்துவந்தாா். இவருக்கும், கந்தபுரத்தைச் சோ்ந்த பனைத் தொழிலாளியான சிவபெருமாள் என்பவருக்கு‘ம் முன்விரோதம் இருந்ததாம். இவா்களுக்குள் கொட்டங்காட்டில் ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சிவபெருமாளைத் தேடி கந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஜெயபால் சென்றாராம். அங்கு அவா் இல்லாததால் திரும்பிச் சென்றுகொண்டிருந்தாராம்.இதைப் பாா்த்த சிவபெருமாளின் தம்பி மோகன்(25) அரிவாளை எடுத்துவந்து ஜெயபாலை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினராம். இத்தகவல் அறிந்த மெஞ்ஞானபுரம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.