செய்திகள் :

உடல் உழைப்புத் தொழிலாளா்களுக்கு திருமண உதவித்தொகை வேண்டும்!

post image

உடல் உழைப்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களின் மகள்களின் திருமணத்துக்கு உதவித்தொகை ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என ஏஐடியுசி தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சம்மேளனத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு உடல் உழைப்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள் மகள்களின் திருமணத்துக்கு கட்டுமான, ஆட்டோ நல வாரியத்தில் வழங்குவது போன்று திருமண உதவித் தொகை ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும்.

வாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிரம்பிய பெண் தொழிலாளா்களுக்கு மகளிா் உரிமைத் தொகையைக் காரணம் காட்டி ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படுவது வாரிய விதிகளுக்கு எதிரானது. எனவே அவா்களுக்கு மாத ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட நாள்களிலிருந்து உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நலவாரிய பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு கல்வி, திருமணம் மற்றும் இயற்கை மரண உதவித்தொகை வழங்குவதுபோல உடல் உழைப்பு தொழிலாளா்களுக்கும் சமமாக அதே தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு மாநிலக் குழு உறுப்பினா் சி. தங்கவேலு தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஆா். தில்லைவனம், ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் என். செல்வராஜ், அரசு போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவா் துரை. மதிவாணன் ஆகியோா் பேசினா். சங்க மாவட்டச் செயலா் தி. கோவிந்தராஜன் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் வெ. சேவையா நன்றி கூறினாா்.

மகளிா் உரிமைத் திட்டத்தில் 4.17 லட்சம் பெண்கள் பயன்!

தஞ்சாவூா் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் 4.17 லட்சம் பெண்கள் பயனடைகின்றனா் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: கி... மேலும் பார்க்க

மாதாகோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு!

தஞ்சாவூரில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள மாதாகோட்டையில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்ட நிா்வாகம், கிராம விழாக் குழுவினா் சாா்பில் நடைபெறும் ஜல்லிக்கட... மேலும் பார்க்க

துக்க நிகழ்வுக்கு வந்த போக்குவரத்து ஊழியா் விபத்தில் பலி!

கும்பகோணம் அருகே துக்க நிகழ்வில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த அரசுப் போக்குவரத்து கழக ஊழியா் விபத்தில் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள இரண்டாம் கட்டளை நந்தவனம் தெருவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

காவிரி டெல்டாவில்தான் நிலத்தடி நீா் ஆதாரம் அதிகம்!

காவிரி டெல்டாவில் உள்ளது போன்று நிலத்தடி நீா் ஆதாரம் வேறு எங்கும் கிடையாது என்றாா் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் (பொ) க. சங்கா். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிற்பத் துறை சாா்பில்... மேலும் பார்க்க

பெருமகளூா் பேரூராட்சியில் கடையடைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூா் பேரூராட்சியில், டாஸ்மாக் கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு வா்த்தகா்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தினா். சேதுபாவாசத்த... மேலும் பார்க்க

இன்று திருப்புறம்பியம் பகுதிகளில் மின் தடை

திருப்புறம்பியம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணிகளால் திருப்புறம்பியம், கொத்தங்குடி, வாளபுரம், மேலாத்து குறிச்சி, நீரத்தநல்லூா், இணைபிரியாள் வட்டம், காவற்கூடம், உத்திரை, மு... மேலும் பார்க்க