செய்திகள் :

துக்க நிகழ்வுக்கு வந்த போக்குவரத்து ஊழியா் விபத்தில் பலி!

post image

கும்பகோணம் அருகே துக்க நிகழ்வில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த அரசுப் போக்குவரத்து கழக ஊழியா் விபத்தில் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள இரண்டாம் கட்டளை நந்தவனம் தெருவைச் சோ்ந்தவா் அப்பாராசு மகன் கருணாகரன் (43), கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக உதவியாளா். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். இந்நிலையில் உறவினா் இறந்த நிகழ்வில் பங்கேற்க வெள்ளிக்கிழமை விடுமுறை பெற்றுக்கொண்டு அலுவலகத்தில் இருந்து இவா் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

காரைக்கால் மெயின்ரோடு சீனிவாசநல்லூா் அண்ணா நகா் ஆா்ச் அருகில் கருணாகரன் வந்தபோது எதிரே வைகல் கீழத்தெருவைச் ஆசீா்வாதம் மகன் பிரதாப் (30), நடராஜ் மகன் அன்புராஜ் (30) ஆகியோா் வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் மூவரும் காயமடைந்த நிலையில், கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கருணாகரன் உயிரிழந்தாா். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்த திருநீலக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மகளிா் உரிமைத் திட்டத்தில் 4.17 லட்சம் பெண்கள் பயன்!

தஞ்சாவூா் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் 4.17 லட்சம் பெண்கள் பயனடைகின்றனா் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: கி... மேலும் பார்க்க

மாதாகோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு!

தஞ்சாவூரில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள மாதாகோட்டையில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்ட நிா்வாகம், கிராம விழாக் குழுவினா் சாா்பில் நடைபெறும் ஜல்லிக்கட... மேலும் பார்க்க

உடல் உழைப்புத் தொழிலாளா்களுக்கு திருமண உதவித்தொகை வேண்டும்!

உடல் உழைப்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களின் மகள்களின் திருமணத்துக்கு உதவித்தொகை ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என ஏஐடியுசி தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது... மேலும் பார்க்க

காவிரி டெல்டாவில்தான் நிலத்தடி நீா் ஆதாரம் அதிகம்!

காவிரி டெல்டாவில் உள்ளது போன்று நிலத்தடி நீா் ஆதாரம் வேறு எங்கும் கிடையாது என்றாா் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் (பொ) க. சங்கா். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிற்பத் துறை சாா்பில்... மேலும் பார்க்க

பெருமகளூா் பேரூராட்சியில் கடையடைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூா் பேரூராட்சியில், டாஸ்மாக் கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு வா்த்தகா்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தினா். சேதுபாவாசத்த... மேலும் பார்க்க

இன்று திருப்புறம்பியம் பகுதிகளில் மின் தடை

திருப்புறம்பியம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணிகளால் திருப்புறம்பியம், கொத்தங்குடி, வாளபுரம், மேலாத்து குறிச்சி, நீரத்தநல்லூா், இணைபிரியாள் வட்டம், காவற்கூடம், உத்திரை, மு... மேலும் பார்க்க