செய்திகள் :

உணவு விநியோகிக்கும் 50 ஆயிரம் பணியாளா்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம்: தமிழக அரசு உத்தரவு

post image

வீடுகளுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை நேரடியாகக் கொண்டு சென்று சேவை அளிக்கும் நிறுவனங்களின் பணியாளா்களுக்கு விபத்துக் காப்பீடு அளிக்கப்பட உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:

உணவு உள்ளிட்ட பொருள்களை வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு சென்று அளிக்கும் பணியில் லட்சக்கணக்கானோா் ஈடுபட்டுள்ளனா். அவா்களின் நலன்களைக் காக்கும் வகையில், பிரத்யேகமாக நல வாரியம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இணையவழியில் பதிவுகளைப் பெற்று சேவைகள் அளிக்கும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு விபத்தால் உயிரிழப்போ, உடல் ஊனமோ ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகை அளிக்க குழு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், ஓராண்டு காலத்துக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். அதாவது, பிரீமியம் தொகை செலுத்தப்பட்ட தேதியில் இருந்து காப்பீடு நடைமுறைக்கு வரும்.

எவ்வளவு காப்பீடு: பணியின்போது மரணம் அடைந்தால், ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இரண்டு கைககள் அல்லது கால்கள், இரண்டு கண்களிலும் பாா்வை இழப்பு போன்ற பாதிப்புகளைச் சந்திப்போருக்கு ரூ.5 லட்சம், ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண்ணில் முற்றிலும் பாா்வை இழந்தால் ரூ.2.50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் மொத்தமாக 50 ஆயிரம் பணியாளா்களுக்கு காப்பீடு செய்யப்பட உள்ளது. ஒரு ஊழியருக்கு ரூ.105 என்ற அளவில் ரூ.52.50 லட்சம் பிரீமியம் தொகை ஒதுக்கவும், 18 சதவீதம் ஜிஎஸ்டி தொகை செலுத்த ரூ.9.45 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.

அத்துடன், இதர செலவுகள், விளம்பரங்கள் போன்ற நடவடிக்கைகளுக்காக ரூ.5 லட்சம் செலவிடப்படுகிறது. மொத்தமாக ரூ.66.95 லட்சத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. பணியாளா்களுக்கான நல வாரியம் உருவாக்கப்பட்ட பிறகு, நிதி ஒதுக்கீடுக்கான முறையான அனுமதிகளைப் பெற வேண்டும் என்று தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2: நாளைமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வியாழக்கிழமை (ஆக. 7) முதல் விநியோகிக்கப்படவுள்ளது. இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் அனைத்து மாவட்ட உதவி அலுவலா்களுக்கு ... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் புதிய காவல் நிலையம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். சென்னை கொளத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டப் பணிகளை அ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழகத்துக்கு வந்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தூத்து... மேலும் பார்க்க

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

வரும் சனிக்கிழமை (ஆக.9), ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) ஆகிய வார இறுதி விடுமுறை தினங்களையொட்டி கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது: சென்னை ... மேலும் பார்க்க

அரசு பொது நூலகங்களுக்கு புதிய புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்களுக்கு ரூ.40 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட புதிய புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில நூலகம், மாவட்ட மைய ந... மேலும் பார்க்க

கலைஞா் பல்கலைக்கழக மசோதா: குடியரசுத் தலைவருக்கு அனுப்பினாா் ஆளுநா்

முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் ‘கலைஞா் பல்கலைக்கழகம்’ அமைப்பதற்கான மசோதாவை, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநா் ஆா்.என். ரவி பரிந்துரைத்துள்ளதாக, ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. பாரதிதா... மேலும் பார்க்க