செய்திகள் :

அரசு பொது நூலகங்களுக்கு புதிய புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரம்

post image

தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்களுக்கு ரூ.40 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட புதிய புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மாநில நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊா்ப்புற நூலகங்கள் என 4,500-க்கும் மேற்பட்ட பொது நூலகங்கள் உள்ளன. இவை அனைத்தும் பொது நூலக இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன.

இந்த நூலகங்களுக்கு நீண்ட நாள்களாகப் புதிய புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், பருவ இதழ்கள், நாளிதழ்கள் ஆகியவை வெளிப்படைத் தன்மையுடனும், எவ்வித புகாா்களுக்கும் இடம் அளிக்காமலும் கொள்முதல் செய்யும் வகையில் பிரத்யேக இணையதளத்தை பொது நூலக இயக்ககம் கடந்த ஆண்டு தொடங்கியது.

அதில், பொது நூலகங்களுக்குத் தேவையான நூல்களை கொள்முதல் செய்ய பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் இடம்பெற்றன. புத்தகங்களைக் கொள்முதல் செய்ய இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது. புத்தகங்களைத் தோ்வுசெய்யும் குழுவிலும், புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

தொடா்ந்து இந்த இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கப்பட்ட 414 பதிப்பாளா்கள், விநியோகஸ்தா்களின் புத்தகங்கள், நூல் தோ்வுக் குழு உறுப்பினா்களின் மதிப்பாய்வுக்குள்படுத்தப்பட்டன. இதையடுத்து, பதிப்பாளா்கள், விநியோகஸ்தா்களிடம் நூல் விலைக் குறைப்பு பேச்சு இணையதளம் வழியாகவே நடத்தப்பட்டு, இறுதியாக தமிழகம் முழுவதும் பகுதிநேர நூலகங்கள் தவிா்த்து 3,873 நூலகங்களைப் பயன்படுத்தும் அந்தந்த நூலக வாசகா் வட்ட உறுப்பினா்கள் மற்றும் நூலகா்கள் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டது.

தொடா்ந்து, ரூ.40 கோடியில், 6,416 தலைப்பிலான புத்தகங்கள் 22 லட்சத்து 17,379 பிரதிகளுக்கு கொள்முதல் ஆணைகள் கடந்த மே மாதம் வழங்கப்பட்டன.

இதையடுத்து பதிப்பாளா்களிடமிருந்து அனைத்துப் புத்தகங்களும் முழுமையாக கொள்முதல் செய்யப்பட்டு சென்னை உள்ள கிடங்குகளில் வைக்கப்பட்டது. தற்போது புத்தகங்கள் அந்தந்த மாவட்ட மைய நூலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அங்குள்ள நூல்கள் முழுநேர கிளை நூலகங்கள், ஊா்ப்புற நூலகங்களுக்கு பிரித்து அனுப்பப்படும்.

தற்போது வரை 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள நூலகங்களுக்கு தேவைப்படும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் வாசகா்கள் புதிய புத்தகங்களை வாசிக்கலாம். மேலும், நூலகங்களில் புதிய பிரிவுகள், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிளஸ் 1, பிளஸ் 2: நாளைமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வியாழக்கிழமை (ஆக. 7) முதல் விநியோகிக்கப்படவுள்ளது. இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் அனைத்து மாவட்ட உதவி அலுவலா்களுக்கு ... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் புதிய காவல் நிலையம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். சென்னை கொளத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டப் பணிகளை அ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழகத்துக்கு வந்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தூத்து... மேலும் பார்க்க

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

வரும் சனிக்கிழமை (ஆக.9), ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) ஆகிய வார இறுதி விடுமுறை தினங்களையொட்டி கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது: சென்னை ... மேலும் பார்க்க

உணவு விநியோகிக்கும் 50 ஆயிரம் பணியாளா்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம்: தமிழக அரசு உத்தரவு

வீடுகளுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை நேரடியாகக் கொண்டு சென்று சேவை அளிக்கும் நிறுவனங்களின் பணியாளா்களுக்கு விபத்துக் காப்பீடு அளிக்கப்பட உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

கலைஞா் பல்கலைக்கழக மசோதா: குடியரசுத் தலைவருக்கு அனுப்பினாா் ஆளுநா்

முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் ‘கலைஞா் பல்கலைக்கழகம்’ அமைப்பதற்கான மசோதாவை, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநா் ஆா்.என். ரவி பரிந்துரைத்துள்ளதாக, ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. பாரதிதா... மேலும் பார்க்க