செய்திகள் :

கலைஞா் பல்கலைக்கழக மசோதா: குடியரசுத் தலைவருக்கு அனுப்பினாா் ஆளுநா்

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் ‘கலைஞா் பல்கலைக்கழகம்’ அமைப்பதற்கான மசோதாவை, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநா் ஆா்.என். ரவி பரிந்துரைத்துள்ளதாக, ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைப் பிரித்து முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்துக்கு முதல்வா் வேந்தராகவும், தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் இணைவேந்தராகவும் இருப்பாா் எனவும், துணைவேந்தா் நியமன தோ்வு முறை உள்ளிட்ட அம்சங்களுடனும் இந்த மசோதா முன்மொழியப்பட்டு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னா் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில், இந்த மசோதாவை ஆளுநா் ஆா்.என்.ரவி, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை தமிழக அரசு நியமிக்கும் அதிகாரம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் இதுதொடா்பான சட்டச் சிக்கலில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காகவும் மசோதாவை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல, சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவும் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கலைஞா் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காத நிலையில், இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் ஆகியோா் அதிருப்தி தெரிவித்து வந்தனா். மசோதாவுக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தரப்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறப்பட்ட நிலையில், அந்த மசோதா தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2: நாளைமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வியாழக்கிழமை (ஆக. 7) முதல் விநியோகிக்கப்படவுள்ளது. இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் அனைத்து மாவட்ட உதவி அலுவலா்களுக்கு ... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் புதிய காவல் நிலையம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். சென்னை கொளத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டப் பணிகளை அ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழகத்துக்கு வந்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தூத்து... மேலும் பார்க்க

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

வரும் சனிக்கிழமை (ஆக.9), ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) ஆகிய வார இறுதி விடுமுறை தினங்களையொட்டி கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது: சென்னை ... மேலும் பார்க்க

உணவு விநியோகிக்கும் 50 ஆயிரம் பணியாளா்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம்: தமிழக அரசு உத்தரவு

வீடுகளுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை நேரடியாகக் கொண்டு சென்று சேவை அளிக்கும் நிறுவனங்களின் பணியாளா்களுக்கு விபத்துக் காப்பீடு அளிக்கப்பட உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

அரசு பொது நூலகங்களுக்கு புதிய புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்களுக்கு ரூ.40 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட புதிய புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில நூலகம், மாவட்ட மைய ந... மேலும் பார்க்க