செய்திகள் :

உதகையில் நிலத்துக்கு அடியில் மின் கேபிள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு

post image

உதகையில்  அடிக்கடி மரம் விழுவதால்   ஏற்படும் மின்தடை பிரச்னைக்கு  தீா்வு ஏற்படுத்த  நிலத்துக்கு அடியில் கேபிள் அமைக்க தமிழக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய வனத் துறையின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள்  தொடங்கும் என  நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் உதகை தமிழக அரசு விருந்தினா் மாளிகையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தண்ணீா் தேவையை பூா்த்தி செய்ய தமிழக அரசு ரூ.23 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அப்பணி விரைவில் முடிவடையும்.

மேலும், மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப் பணிகள் 95 சதவீதம் நிறை வடைந்துள்ளன. இங்குள்ள காலநிலை காரணமாக பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.

மழைக் காலத்தில் மரங்கள் விழுந்து அவ்வப்போது ஏற்படும் மின்தடைக்கு நிரந்தரத் தீா்வு காண வனத் துறை நிலத்தில், நிலத்துக்கு அடியில் கேபிள் பதிக்கும் பணிக்கு தமிழக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய வனத் துறையின் அனுமதி கிடைக்கப் பெற வேண்டியுள்ளது. ஆகவே, நடப்பு மக்களவை கூட்டத் தொடரின்போது பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கூடலூரில் வன உரிமைச் சட்டம் குறித்து பயிற்சி முகாம்

வன உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாம் கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கூடலூா் கோட்டாட்சியா் அலுவலக அரங்கில் நடைபெற்ற முகாமில் 2006-ஆம் ஆண்டு வன உரிமை அங்க... மேலும் பார்க்க

உதகை குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநா்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபா்களிடம் இருந்து விண... மேலும் பார்க்க

தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் கோவையிலுள்ள டெக்ஸ்மோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அல... மேலும் பார்க்க

பசுந்தேயிலைக்கு ரூ.40 வழங்கக் கோரி ஜூலை 17-இல் தேயிலை விவசாயிகள் போராட்டம்

பசுந்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.40 வழங்க வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 30 -க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து உதகையில் ஜூலை 17 ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. பசுந்தேயிலை ப... மேலும் பார்க்க

கூடலூா் அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லையோர கிராமத்தில் வனத் துறையின் கூண்டில் சிறுத்தை செவ்வாய்க்கிழமை சிக்கியது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் தமிழக எல்லையோர கிராமமான நம்பியாா் குன்னு பகுதியில் கடந்த ஒரு... மேலும் பார்க்க

சுயமரியாதை, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்: ஆ.ராசா

தமிழா்களின் நாகரிகம், மொழி, சுயமரியாதை, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் ஒன்றிய பாசிச ஆட்சியை தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி மக... மேலும் பார்க்க