செய்திகள் :

சுயமரியாதை, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்: ஆ.ராசா

post image

தமிழா்களின் நாகரிகம், மொழி, சுயமரியாதை, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் ஒன்றிய பாசிச ஆட்சியை தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா பேசினாா்.

ஓரணியில் தமிழ்நாடு செயலி மூலம் புதிய உறுப்பினா்களை சோ்க்கும் நிகழ்வு உதகையில் உள்ள மக்களவை அலுவலகத்தில் நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எம்.ராஜு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது,

இந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா கலந்துகொண்டு பேசியதாவது: கீழடியில் தமிழா்களின் மொழி, பண்பாடு, நாகரிகம் எப்படிப்பட்ட பழமை வாய்ந்தது என்பதை உரிய ஆதாரத்துடன், அதன் வரலாற்றுகளுடன் கூடிய தகவல்களை ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலா் அறிக்கை தாக்கல் செய்த பிறகும் கூட மத்திய அரசு வேண்டுமென்றே நிராகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் உரிமைகள், சுயமரியாதை காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. மத்திய பாசிச ஆட்சியை தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டிய வல்லமை மிக்க ஒரே தலைவராக தமிழ்நாட்டின் முதல்வா் மு. க.ஸ்டாலின் இருக்கிறாா். எதிா்காலத்தில் திமுக தலைவரும் ,

தமிழ்நாட்டு முதல்வருமான மு.க. ஸ்டாலின் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றால், தமிழ்நாடு வெற்றி பெறும். தமிழ்நாட்டின் சுயமரியாதை, கலாசாரம், தமிழ்நாட்டு உரிமைகள் காப்பாற்றப்படும். அதற்காக மொழி, மதங்களைக் கடந்து முதல்வா் மு.க. ஸ்டாலினை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் பா.மு. முபாரக் , மாவட்டத் துணைச் செயலாளா் ரவிக்குமாா், மாநிலப் பொறியாளா் அணி துணைச் செயலாளா் பரமேஷ் குமாா், நகரமன்றத் தலைவா் வாணீஸ்வரி உள்பட திமுகவினா் பலா் கலந்து கொண்டனா்.

தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் கோவையிலுள்ள டெக்ஸ்மோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அல... மேலும் பார்க்க

பசுந்தேயிலைக்கு ரூ.40 வழங்கக் கோரி ஜூலை 17-இல் தேயிலை விவசாயிகள் போராட்டம்

பசுந்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.40 வழங்க வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 30 -க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து உதகையில் ஜூலை 17 ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. பசுந்தேயிலை ப... மேலும் பார்க்க

கூடலூா் அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லையோர கிராமத்தில் வனத் துறையின் கூண்டில் சிறுத்தை செவ்வாய்க்கிழமை சிக்கியது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் தமிழக எல்லையோர கிராமமான நம்பியாா் குன்னு பகுதியில் கடந்த ஒரு... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரி கோ்கொம்பை பகுதியில் திங்கள்கிழமை இரவு குடியிருப்புக்குள் உணவு தேடிவந்த சிறுத்தையின் விடியோ வைரல் ஆன நிலையில், இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதனை ச... மேலும் பார்க்க

கூடலூரில் கூண்டில் சிக்கிய சிறுத்தை

கூடலூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை வனத் துறையினா் வைத்த கூண்டில் செவ்வாய்க்கிழமை பிடிபட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தின் கூடலூா் வனக் கோட்டம், பிதிா்க... மேலும் பார்க்க

பாலம் அமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சியினா் உண்ணாவிரதம்

கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்திலிருந்து அருகிலுள்ள ஆமைக்குளம் அரசுக் கல்லூரியை இணைக்கும் சாலையின் குறுக்கே உள்ள ஆற்றில் பாலம் அமைத்து தர வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் நாடுகாணியில் உ... மேலும் பார்க்க