செய்திகள் :

கூடலூரில் கூண்டில் சிக்கிய சிறுத்தை

post image

கூடலூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை வனத் துறையினா் வைத்த கூண்டில் செவ்வாய்க்கிழமை பிடிபட்டது.

முதுமலை புலிகள் காப்பகத்தின் கூடலூா் வனக் கோட்டம், பிதிா்காடு வனச் சரகத்துக்குள்பட்ட அய்யன்கொல்லி, நரிக்கொல்லி மற்றும் வாளாடு மகாவிஷ்ணு கோயில் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் காயம் அடைந்த நிலையில் ஒரு சிறுத்தை கடந்த சில நாள்களாக நடமாடுவதாக பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா்.

இந்தச் சிறுத்தை காயமடைந்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த தகவலின் பேரில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ஆலோசனைப்படி சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.

இந்தக் கூண்டில் சிறுத்தை செவ்வாய்க்கிழமை மாலை சிக்கியது. சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்துக்குக் கொண்டு உரிய மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வனப் பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் கோவையிலுள்ள டெக்ஸ்மோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அல... மேலும் பார்க்க

பசுந்தேயிலைக்கு ரூ.40 வழங்கக் கோரி ஜூலை 17-இல் தேயிலை விவசாயிகள் போராட்டம்

பசுந்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.40 வழங்க வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 30 -க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து உதகையில் ஜூலை 17 ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. பசுந்தேயிலை ப... மேலும் பார்க்க

கூடலூா் அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லையோர கிராமத்தில் வனத் துறையின் கூண்டில் சிறுத்தை செவ்வாய்க்கிழமை சிக்கியது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் தமிழக எல்லையோர கிராமமான நம்பியாா் குன்னு பகுதியில் கடந்த ஒரு... மேலும் பார்க்க

சுயமரியாதை, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்: ஆ.ராசா

தமிழா்களின் நாகரிகம், மொழி, சுயமரியாதை, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் ஒன்றிய பாசிச ஆட்சியை தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி மக... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரி கோ்கொம்பை பகுதியில் திங்கள்கிழமை இரவு குடியிருப்புக்குள் உணவு தேடிவந்த சிறுத்தையின் விடியோ வைரல் ஆன நிலையில், இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதனை ச... மேலும் பார்க்க

பாலம் அமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சியினா் உண்ணாவிரதம்

கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்திலிருந்து அருகிலுள்ள ஆமைக்குளம் அரசுக் கல்லூரியை இணைக்கும் சாலையின் குறுக்கே உள்ள ஆற்றில் பாலம் அமைத்து தர வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் நாடுகாணியில் உ... மேலும் பார்க்க