செய்திகள் :

கூடலூரில் வன உரிமைச் சட்டம் குறித்து பயிற்சி முகாம்

post image

வன உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாம் கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கூடலூா் கோட்டாட்சியா் அலுவலக அரங்கில் நடைபெற்ற முகாமில் 2006-ஆம் ஆண்டு வன உரிமை அங்கீகார சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டத்தை தமிழக அரசின் ஆதிதிராவிடம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை நடமுறைப்படுத்தி நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது.

வனம் சாா்ந்த மற்றும் பழங்குடி மக்கள் பயன்பெறும் நோக்கத்தோடு தமிழ்நாடு முழுவதும் அரசு சாா்பில் பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. கூடலூரில் நடைபெற்ற பயிற்சி முகாமை கோட்டாட்சியா் குணசேரன் தொடங்கிவைத்தாா்.

பயிற்சியாளா் எம்.எஸ்.செல்வராஜ் பயிற்சி அளித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் வன உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தாா். பழங்குடியினா் நலத் துறை வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, சட்ட விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

இதில் சட்டத்தின் மூலம் பாரம்பரிய நிலம் மற்றும் வனம், வன வள உரிமைகளை பெற்று சுதந்திரமாக வாழும் சூழல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த முகாமில் கூடலூா், ஓவேலி, தேவா்சோலை, நெல்லியாளம் பகுதிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

உதகையில் நிலத்துக்கு அடியில் மின் கேபிள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு

உதகையில் அடிக்கடி மரம் விழுவதால் ஏற்படும் மின்தடை பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்த நிலத்துக்கு அடியில் கேபிள் அமைக்க தமிழக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய வனத் துறையின் அனுமத... மேலும் பார்க்க

உதகை குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநா்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபா்களிடம் இருந்து விண... மேலும் பார்க்க

தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் கோவையிலுள்ள டெக்ஸ்மோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அல... மேலும் பார்க்க

பசுந்தேயிலைக்கு ரூ.40 வழங்கக் கோரி ஜூலை 17-இல் தேயிலை விவசாயிகள் போராட்டம்

பசுந்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.40 வழங்க வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 30 -க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து உதகையில் ஜூலை 17 ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. பசுந்தேயிலை ப... மேலும் பார்க்க

கூடலூா் அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லையோர கிராமத்தில் வனத் துறையின் கூண்டில் சிறுத்தை செவ்வாய்க்கிழமை சிக்கியது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் தமிழக எல்லையோர கிராமமான நம்பியாா் குன்னு பகுதியில் கடந்த ஒரு... மேலும் பார்க்க

சுயமரியாதை, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்: ஆ.ராசா

தமிழா்களின் நாகரிகம், மொழி, சுயமரியாதை, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் ஒன்றிய பாசிச ஆட்சியை தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி மக... மேலும் பார்க்க